சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரருக்கு வலது முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதையையடுத்து மூன்றாவது தடவையாகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரோஜர் ஃபெடரர் பல மாதங்களாக டென்னிஸிலிருந்து விலகி ஒய்விலிருப்பார் என்று கூறப்படுகிறது.
40 வயதை எட்டியுள்ள ரோஜர் ஃபெடரர் மூன்றாவது தடவையாகவும் தனது வலது முழங்காலில் அறுவை சிகிச்சை ஒன்றை இவ்வருடத்திற்குள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
20 கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரோஜர் ஃபெடரர் கடந்த வருடம் இரண்டு தடவைகளாக முழங்கால் அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
ஜூலை மாதம் விம்பிள்டனில் நடந்த காலி இறுதிப் போட்டியில் அவர்
வெளியேற்றப்பட்டார்.
பின்னர் டோக்கியோ ஒலிப்பிக்கிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையிலேயே மேலுமொரு அறுவை சிகிசைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனால் ரோஜர் ஃபெடார் மேலும் சில மாதங்கள் டென்னிஸிலிருந்து
விலகியிருப்பார் என்று கூறப்படுகிறது.