முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஹோல்டிங் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 60 டெஸ்ட் 102 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய மைக்கேல் ஹோல்டிங் 391 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
1975 முதல் 1987 வரை விளையாடினார் அதன் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக ஆக 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றினார். வெளிப்படையான கருத்துகளாலும் இன,நிற வேறுபாடுகளுக்கு எதிரான தன்னுடைய வலுவான நிலைப்பாடுகளுக்காகவும் ரசிகர்கள் மத்தியில் அவருடைய வர்ணனைக்கு எப்போதும் ஆதரவு இருக்கும்.
இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் ஹோல்டிங் கடந்த வருடம் இது பற்றி அவர் பேட்டியளித்ததாவது என்னுடைய வயதில் என்னால் பயணத்தில் எவ்வளவு காலம் ஈடுபட முடியும் என தெரியவில்லை.
எனக்கு இப்போது 66 வயதாகிறது என்னுடைய வயது 36-46-56 எல்லாம் இல்லை என்றார்.
கடந்த வருடம் ஜார்ஜ் ஃபிளாய்ட் விவகாரத்தை முன்வைத்து தொலைக்காட்சியில் இனப்பாகுபாடு குறித்து ஹோல்டிங் பேசினார்.
கண்ணீருடன் நிறவெறி குறித்து தன்னுடைய கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார் இதற்குச் சமூக வலைத்தளங்களில் அதிக பாராட்டுகள் கிடைத்தன. ஹோல்டிங்கின் ஓய்வு பற்றி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் கூறியதாவது.
கிரிக்கெட் வர்ணனையில் அற்புதமான வாழ்க்கை அமைந்ததற்கு வாழ்த்துக்கள். உலகம் முழுக்க உங்கள் குரலை பல லட்சம் ரசிகர்கள் இழப்பார்கள். நீங்கள் அளித்த வெளிப்படையான நடுநிலைமையான கருத்துக்கள் எனக்கு பிடிக்கும் உடல்நலத்தைக் கவனித்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை அனுபவியுங்கள் என்றார்.