நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் பீபா உலகக் கிண்ணத்தை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்த உலக கால்பந்தாட்ட சம்மேளனமான பீபா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அனைத்து உறுப்பு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த பீபா விசேட கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளது. இணையவழியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
பீபாவின் உறுப்பினர் சங்கங்களுடனான இந்த சந்திப்பின் போது சர்வதேச கால்பந்து போட்டி அட்டவணையை திருத்தவும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய முடிவு குறித்து கால்பந்து ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு கால்பந்து போட்டிகளைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.