இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை டர்ஹாமில் ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணியை தோற்கடித்து இங்கிலாந்து அணி 3-0 என்று தொடரைக் கைப்பற்றியது.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை அணி முதலில் இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது.
இதில் முதல் போட்டியில் 08 விக்கெட்டுகளினாலும் இரண்டாவது போட்டியில் 05 விக்கெட்டுகளினாலும் நாடு மூன்றாவது போட்டியில் 91 ஓட்டங்களாளும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாக உள்ளது.
ஏற்கனவே அணியின் நிலைமை மிக மோசமாகவுள்ள நிலையில் இலங்கை அணி வீரர்களான குசல் மெண்டிஸ் ( துணைத் தலைவர் )தனுஸ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை இலங்கை கிரிக்கெட் செயற்குழு இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.