ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதாக இருந்த தொடரே இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்விரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகின்றது.
இந்தத் தொடரின் போட்டிகள் அனைத்தும் அம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எஞ்சிய ஐ.பி.எல் போட்டிகள் குறித்த தினங்களில் எமிரேட்ஸில் நடைபெறவுள்ளதால் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் தொடருக்கான மைதானங்களை ஒதுக்கிக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமத்தினாலேயே இந்தத் தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே உள்ள பொத்தானை அழுத்தவும்.