இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
மனிதர்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் தனது வேலைகளை இலகுபடுத்தும் காரணத்துக்காக மனிதன் பல்வேறு வித்தியாசமான இயந்திரங்களை கண்டுபிடித்துள்ளான். அந்தவகையில் கூட்டல் கழித்தல் போன்ற செயற்பாடுகளை பெரிய இலக்கங்களை அதாவது உதாரணமாக ஐந்து இலக்கங்களைக் கொண்ட இரண்டு எண்களை கூட்ட வேண்டும் என்ற தேவை எழும் பொழுது அதனை விரல்களாலும் மனதாலோ செய்வது கடினமாகும்.
அதனால் தான்,முதன்முதலாக அபேக்கஸ் (Abacus) என்ற கருவியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகத்தின் முதலாவது கணிப்பு சாதனமாகும்.இதனைத் தொடர்ந்து நேப்பியர் கட்டைகள் எனப்படும் (Napier Bones) பயன்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து துளை அட்டை (Punch Card) முறைமூலம் கூட்டல் கழித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.இதனைத்தொடர்ந்து கூட்டல் இயந்திரம் எனப்படும் Adding Machine இனைக் கண்டு பிடித்தார்கள்.கூட்டல் கழித்தல் செயற்பாடுகளைச் செய்யக் கூடிய முதலாவது இயந்திரமாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த கருவியானது பெருக்கல் பிரித்தல் ஆகியவற்றையும் செய்யக்கூடியதாக மாற்றம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிளைஸ் பாஸ்கல் அவர்கள் Analytical engine பைக் கண்டுபிடிக்க , அக்கருவி செயற்படுவதற்கான கட்டளைகளை உருவாக்கி உலகின் முதலாவது Programmer ஆக அடையாளம் காணப்பட்டவர் லேடி அடா ஆகஸ்டா லவ்லேஸ் அவர்களாவார்.
இவ்வாறு வளர்ச்சி அடைந்து கொண்டு வந்த வரிசையில்தான் இறுதிப் படியிலே கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைய காலத்தில் கணினிகள் முந்திய காலம் போலில்லாமல் மிகவும் நிறை குறைந்த வேக வேகமாக செயற்படக்கூடிய தொழில்நுட்பம் வாய்ந்தவையாக மாற்றமடைந்து வந்துள்ளன. செல்லிடத் தொலைபேசிகளை தொடுதிரையினைக் புகுத்திய ஒரு மாபெரும் புரட்சியை தொடர்ந்து செல்லிடத் தொலைபேசிகளும் கணினிகளுக்கு நிகரான ஒரு உபகரணம் ஆக இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
image source:https://www.fastnewsfeed.com/news/first-generation-of-computer-know-in-details-here/