நம்மைச் சுற்றி எத்தனையோ பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு தினத்தையும் நாம் இன்று கடந்து வந்து கொண்டிருக்கிறோம்.
எதிர்ப்பார்க்காமல் எழுகின்ற பிரச்சினைகளாக இருக்கட்டும் அல்லது முன்பே தெரிந்திருந்தாலும் அந்த பிரச்சனையை முகம் கொடுப்பதற்காக நாங்கள் காத்திருக்கின்ற பிரச்சினைகளாக இருக்கட்டும் நம்மை எப்படியும் ஒரு முறை குலுக்கி எடுத்துவிடும்.
பெற்றோர்களாக இருப்பீர்களாக இருந்தால் பிள்ளைகளுடைய கல்வி, அவர்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடும்பத்தின் பணத் தேவை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம்.
மாணவர்களாக இருந்தால் உங்களுடைய கல்விகள் ஆக இருக்கட்டும், அல்லது நண்பர்களோடு ஏற்படுகின்ற பிரச்சினைகளாக இருக்கட்டும், உங்கள் மீது பொறாமை கொண்டவர்கள் உருவாக்குகின்ற பிரச்சனைகளாக இருக்கட்டும், இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.
இவற்றைத் தாண்டி நீங்களே சமூகத்தில் ஒரு மனிதராக வேற்றுமை, போட்டி, எதிர்ப்பு போன்ற எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம். இவற்றுக்கு முகம் கொடுக்கும் பொழுது அல்லது இந்த பிரச்சனைகளை கடக்கும் பொழுது நீங்கள் சிலவேளைகளில் மனதளவில் அல்லது உடலளவில் அல்லது
பொருளாதாரரீதியில் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
இவ்வாறான தருணங்களில் எதிர்கொள்வது எவ்வாறுதன்னம்பிக்கை ஒன்றே சாவி. சற்று சிந்தித்துப் பாருங்கள் நீங்கள் சிறு குழந்தையாக இருந்தபொழுது முதலாவது முயற்சியிலேயே நடந்துவிடவில்லை. பலதடவைகள் விழுந்து, அடிபட்டு, அழுது ஆயினும் நடக்க வேண்டும் என்பதற்காக இன்று எழுந்து நடந்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு மிகவும் பிடித்தமான யாரேனும் இறந்து இருக்கலாம், அல்லது உங்களிடம் இருந்து மொத்த பணமும் பறி போயிருக்கலாம், அல்லது உங்களுடைய முழு முயற்சியுமே வீணாக போய் இருக்கலாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் “எல்லாமே முடிந்துவிட்டது” என்று நம் மனதில் ஒரு எண்ணம் தோன்றி இருக்கும் இதுதான் தன்னம்பிக்கை இல்லாத நிலை.
ஆழமாக சிந்தியுங்கள் இதற்கு முன்பு எல்லாமே முடிந்துவிட்டது என்ற நிலையில் நீங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றும் உங்களை கடந்து போய்விட்டன. ஆனால் நீங்கள் இன்னும் சளைக்காமல் நின்று கொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுது ஏற்பட்டு இருக்கின்ற பிரச்சனை கூட அதேபோலத்தான்.
இந்தப் பிரச்சினையும் கடந்து போய்விடும். இந்த உலகம் உங்கள் மீது தூக்கி எறியக் கூடிய எந்த ஒரு பிரச்சனையை விடவும் நீங்கள் பெரியவர் என்கின்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்க வேண்டும்.தைரியமாக உலகை எதிர் கொள்ளுங்கள்.
-இதுவும் கடந்து போகும்-