தமிழ் திரையுலகில் ஒரே தருணத்தில் ஆதரவையும் எதிர்ப்பையும் சம்பாதித்து தன் கலைப் பயணத்தைத் தொடர்பவர் நடிகர் சூர்யா.
- புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு
- புதிய ஒளிப்பதிவு வரைவு
- சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு
- டிஜிட்டல் தளத்தில் தன்னுடைய படங்களை வெளியிடுவதால் படமாளிகை அதிபர்களின் எதிர்ப்பு
- என அரசியல் மற்றும் திரையுலகில் எதிர்ப்புகளை சம்பாதித்தாலும் தன்னுடைய அற்புதமான நடிப்புத் திறமையால் சூரரைப் போற்று படத்தை வெற்றி பெற செய்தார்.
அத்துடன் ஆஸ்கார் விருதுக்குரிய படங்களில் ஒன்றாக சூரரைப்போற்று படத்தைத் தெரிவு செய்து திரையிடப்பட்டதால் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றார்.
சூரரைப் போற்று படத்திற்கு பிறகு தற்போது எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் ஜெய்பீம் என நடித்து வரும் படங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்துடன் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி வரும் ஜெய்பீம் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதில் சூர்யா சட்டத்தரணியாக நடித்திருக்கிறார் என தெரியவருகிறது.
இந்த படமும் சூரரைப்போற்று வெளியானதைப் போல் முன்னனி டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கிறது.
அத்துடன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், என தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது.
அனேகமாக தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜெய்பீம் வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.