இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..
நமது வம்சத்தை தொடரச் செய்வது நமது வாரிசாகிய குழந்தைகள் தான். அவர்கள் வாழ்வில் பல நலங்களையும் பெற அவர்களுக்கு ஆரோக்கியமான உடல் இருப்பது அவசியம்.
அப்படி இறைவனின் ஆசிகளோடு குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்கு பிறகு முதலாவது திட உணவை ஊட்டும் சடங்கு தான் ‘அன்னபிரசன்னம்”. தமிழில் இதை ‘சோறு ஊட்டும் சடங்கு” என கூறுவர்.
அன்னபிரசன்னம் சடங்கு எப்படி செய்ய வேண்டும்?
அன்னபிரசன்னம் என்றழைக்கப்படும் இவ்விழாவில் சொந்தபந்தங்கள் சூழ மந்திரங்கள் ஓதி, பூஜை, சடங்குகள் செய்த பின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வாழை இலையிலோ, வெள்ளி கிண்ணத்திலோ அல்லது தட்டிலோ சோறு போட்டு பிசைந்து ஊட்டுவார்கள்.
இச்சடங்கிற்கு சிறந்த உணவாக இருப்பது அரிசி கொண்டு செய்யப்படும் பாயசம் ஆகும். இந்த பாயசத்தை வைத்திருக்கும் பாத்திரம் மற்றும் கரண்டி வெள்ளி பாத்திரங்களாக இருப்பது சிறந்தது. பாயசத்தை குழந்தைக்கு ஜீரணம் செய்யும் பக்குவத்தில் தயாரிக்க படவேண்டும்.
பாயசம் தயாரான பிறகு, வெள்ளி கிண்ணத்தில் அந்த பாயசத்தை ஊற்றி அதில் சிறிது தேன், சிறிது கங்கை நீர், சிறிது துளசி இலைகள், கொஞ்சம் நெய் மற்றும் பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ள வேண்டும்.
குழந்தையை தாயோ, தந்தையோ மடியில் உட்கார வைத்து சுப நேரத்தில் குழந்தையின் பிறந்த கோத்திரம், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை கூறி, நவகிரகங்களுக்குரிய மந்திரங்களை துதித்து, குழந்தையின் பெயரை கூறி வெள்ளி கரண்டியில் சிறிது பாயசத்தை எடுத்து குழந்தையின் தாய் ஊட்ட வேண்டும்.
பிறகு குழந்தையின் தந்தையும், உற்றார் உறவினரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள். பிறகு நண்பர்களும் அண்டை அயலார்களும் வருகை புரிந்து குழந்தையுடன் அன்பு பரிமாறிக் கொள்வார்கள். குழந்தைக்கு சில கரண்டிகளுக்கு மேல் சாப்பிட விருப்பமில்லை என்றால் கட்டாயப்படுத்தி ஊட்டக்கூடாது.
உறவினர்கள் என்ன செய்ய வேண்டும்?
இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் குழந்தைக்கு வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களை அன்பளிப்பாக வழங்குவது சிறப்பானதாகும். இது முடியாதவர்கள் குழந்தைக்கு புத்தாடைகளை பரிசாக வழங்கலாம்.
எப்போது ஊட்ட வேண்டும்?
ஆண் குழந்தைகளுக்கு 6ஆம், 8ஆம் அல்லது 10ஆம் மாதங்களிலும், பெண் குழந்தைகளுக்கு 7ஆம், 9ஆம் அல்லது 11ஆம் மாதங்களிலும் செய்யப்பட வேண்டும்.
அஸ்வினி, மிருகசீரிஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களில் பசுவைக் குழந்தைக்கு காண்பித்து சாதத்தை ஊட்ட வேண்டும்.
துவிதியை, திருதியை பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளிலும், திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் மற்றும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் செய்வது உத்தமம்.
எந்த கோவிலில் செய்யலாம்?
கிராம மக்கள் தங்கள் குலதெய்வக் கோயில்களில் இந்த சடங்கை செய்வர். சிலர் வீட்டிலேயே செய்வார்கள்.
பலன்கள்
அன்னம் ஊட்டுவதால் குழந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, இறைவனின் ஆசிகளால் நீண்ட ஆயுளும், நோய்கள் அண்டாத வாழ்வும் அக்குழந்தைக்கு உண்டாகிறது.
நம் முன்னோர்கள் இப்படி செய்ததன் நோக்கமென்ன? சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்