கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
துர்க்கை அம்மனை கனவில் கண்டால் என்ன பலன்? துர்க்கை அம்மனை கனவில் கண்டால் உங்களுக்கு ராகு திசை நடக்க போவதை குறிக்கின்றது.
கழுகினை கனவில் கண்டால் என்ன பலன்? கழுகினை கனவில் கண்டால் பயணங்களில் கவனம் தேவை என்பதைக் குறிக்கின்றது.
புலியை கனவில் கண்டால் என்ன பலன்? புலியை கனவில் கண்டால் உடனிருப்பவர்களுடன் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
ரயிலில் இருந்து இறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கின்றது.
மற்றவர்களை அடிக்க செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தற்பெருமையான சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது என்பதைக் குறிக்கின்றது.
நண்பர்களை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத ஆதரவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
பாகற்காயை கனவில் கண்டால் என்ன பலன்? பாகற்காயை கனவில் கண்டால் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
வயல்வெளிகளை கனவில் கண்டால் என்ன பலன்? வயல்வெளிகளை கனவில் கண்டால் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
புதிய மாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுப நிகழ்ச்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
திருநங்கைகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.
பைரவரை கனவில் கண்டால் என்ன பலன்? பைரவரை கனவில் கண்டால் பகைவர்களின் தொல்லைகளில் இருந்து விடுபடுவதை குறிக்கின்றது.
சாமி ஊர்வலம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்