கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
புல்லாங்குழலை கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மனமானது நிலையற்ற சூழலில் இருக்கிறது என்பதைக் குறிக்கின்றது.
திருடன் வீட்டு ஜன்னலை உடைப்பது போல் கனவில் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
புதிய வீட்டுக்கு செல்வது போல் கனவில் கண்டால் என்ன பலன்?
புதிய வீட்டுக்கு செல்வது போல் கனவில் கண்டால் புதிய பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
என்னுடைய வண்டி தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான செயல்பாடுகளில் கவனக்குறைவாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.
அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
மரத்தின் கீழ் தியானம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவும், அமைதியும் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
பை நிறைய பணம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் தனவரவுகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.
பூனை என்னை பார்த்து பயந்து ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் இதுவரை ஏற்பட்ட துன்பங்கள் மறையும் என்பதைக் குறிக்கின்றது.
கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
முட்டையை வேக வைத்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
நண்பர்களுடன் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
வானவில்லை கனவில் கண்டால் என்ன பலன்? வானவில்லை கனவில் கண்டால் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.
அறுவடை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
உடுக்கையை கனவு கண்டால் என்ன பலன்? தனக்கு ஏற்படும் ஆபத்திற்கு நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள் என்பதைக் குறிக்கிறது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்