கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
திருநங்கையை கனவில் கண்டால் என்ன பலன்? திருநங்கையை கனவில் கண்டால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
முருங்கைக் கீரையை கனவில் கண்டால் என்ன பலன்? முருங்கைக்கீரையை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி நலம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
பசுமாடு கன்றுப் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பசுமாடு கன்றுப்போடுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
யானையை பலியிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? யானையை பலியிடுவது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளிடம் சற்று பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
ஆமையை கனவில் கண்டால் என்ன பலன்? தொழில் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
சுடர்விட்டு எரியும் தீபத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
யாரோ ஒரு தெரியாத நபரை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மரம் நிறைய கொய்யாப்பழங்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மயிலை கனவில் கண்டால் என்ன பலன்? மயிலை கனவில் கண்டால் தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
நாகத்தை கனவில் கண்டால் என்ன பலன்? நாகத்தை கனவில் கண்டால் மாற்றங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
தற்கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் கவலைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
அசைவ உணவுகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்.