கனவுகளும் பலன்களும்!!
வாங்கிய கடனை திரும்ப கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் தனம் சார்ந்த காரியங்களில் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
வராகி அம்மனை கனவில் கண்டால் என்ன பலன்? வராகி அம்மனை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
அரசியல் தலைவர்களிடம் பரிசு வாங்குவது போல் கனவு கண்டால்
என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
ஒரு பெரிய பள்ளத்தில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒரு பெரிய பள்ளத்தில் விழுவது போல் கனவு கண்டால் முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? பெண்களை கனவில் கண்டால் சுபகாரியங்கள் விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.
பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பால் வாங்குவது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
புடவையை கனவில் கண்டால் என்ன பலன்? புடவையை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
உயிருள்ள மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்? உயிருள்ள மீன்களை கனவில் கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
கார் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யத் தவறிய வேலைகளால் நஷ்டம் ஏற்படப் போவதைக் குறிக்கின்றது.
இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? இறந்தவர்களை கனவில் கண்டால் துன்பங்கள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.
பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்? பன்றியை கனவில் கண்டால் பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
இயந்திரத்தின் மூலமாக கட்டிடத்தை இடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
பணத்தை கனவில் கண்டால் என்ன பலன்? பணத்தை கனவில் கண்டால் பண நெருக்கடி உருவாகும் என்பதைக் குறிக்கின்றது.
சிவலிங்கத்திற்கு பூஜை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுயதொழில் சம்பந்தமான நிதி உதவிகள் மற்றும் உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் விரயச்செலவுகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
புதிய ஆடையை தைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
புதிய ஆடையை தைப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாடு துரத்துவது போல் கனவு கண்டால் எண்ணிய உதவிகள் காலதாமதமான பலன்களைத் தரும் என்பதைக் குறிக்கிறது.
வெற்றிலை கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெற்றிலை கேட்பது போல் கனவு கண்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
திருநங்கையை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
பூ மாலை கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூ மாலை கட்டுவது போல் கனவு கண்டால் புதிய முயற்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பான புதிய எண்ணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
என் மகள் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
பூவை கனவில் கண்டால் என்ன பலன்? பூவை கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்? பாம்பை கனவில் கண்டால் நண்பர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்