இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்
சில வியப்பூட்டும் தகவல்கள்
ஆக்சிஜனுக்கு நிறம் இருக்கா?
ஒரு வாயுவாக, ஆக்சிஜனுக்கு மணம் மற்றும் நிறம் இல்லை. மேலும் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில், இது வெளிர் நீல நிறமாக காணப்படுகிறது.
விண்வெளியில் ஏப்பம் விட முடியாது? ஏன் என்று தெரியுமா?
நாம் சாப்பிடுகிற உணவிலிருந்து திடப்பொருட்களையும், திரவத்தையும் ஈர்த்து விட்ட பிறகு, வாயு மட்டுமே வாயிலிருந்து தப்பித்துக் கொள்ளும், அதுதான் ஏப்பம். இது பூமியில் மட்டுமே சாத்தியம். புவி ஈர்ப்பு இல்லாத விண்வெளி பகுதிகளில் திரவங்கள் மற்றும் திடப்பொருட்களிலிருந்து வாயுவை பிரிக்க முடியாது.
வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது என்று ஏன் சொல்கிறார்கள்?
மரங்களில் மிகவும் அடர்த்தியில்லாத மென்மையான கிளைகளைக் கொண்ட மரம் முருங்கை. அதனால், வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் ஏறி விளையாடினால், கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ள வாய்ப்புண்டு. மேலும், கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை என்பதால், வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிகள் அதிகம் பரவும்.
கோயிலை விட, உயரமாக வீடு கட்டக்கூடாது. என்பதற்கான காரணம் என்ன?
பலத்த இடி இடிக்கும் போது கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தக் கோபுரத்துக்கும், சுற்றிலும் உள்ள வீடுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. அதனால் அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டிடம் கட்ட வேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.
வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்?
நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு-தெற்காகத்தான் இயங்குகிறது. எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது, காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.
பல் துலக்கும் ப்ரஸின் முட்கள் ஏன் வண்ண நிறங்களில் இருக்கு-னு தெரியுமா..?
பல் துலக்கும் ப்ரஸின் முட்கள் வெளுத்து போவதை தெரிவிப்பதற்காக வண்ண நிறங்களில் முட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி நிறங்கள் மாறும்போது நாம் பல் துலக்கும் ப்ரஸ்யை மாற்ற வேண்டும். ஏனென்றால் பல் துலக்கி முட்கள் தேய்ந்து விட்டது என்பதை அந்த நிறங்கள் நமக்கு தெரியப்படுத்துகிறது.
வாழை இலையின் நுனி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
வாழை இலை இடது பக்கத்தில் குறுகிய உணவு அதாவது இனிப்பு, உப்பு, ஊறுகாய் போன்றவை வைப்பார்கள். மேலும் வலது பக்கத்தில் அதிக அளவு பிடிக்கும் உணவுகள் அதாவது சாதம், குழம்பு, ரசம், மோர் போன்றவை வைப்பார்கள். ஏனெனில் இலை வைத்ததும் நமது கண் இடது புறம் நோக்கிதான் செல்லுமாம். அப்போது முதலில் இனிப்பை எடுத்து சாப்பிடுவதால், நாம் அடுத்து சாப்பிடும் உணவுகள் எளிதாக செரிமானம் ஆகும். அதற்காகத்தான் வாழை இலை நுனி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியம்.
வெளியே கிளம்பும்போது தடிக்கினால் தண்ணீர் எதற்காக குடிக்கிறார்கள் என்று தெரியுமா?
வெளியே கிளம்பும்போது தடிக்கினால் கெட்ட சகுனம் என்று நினைத்து கொண்டு வீட்டிற்கு உள்ளே வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்வார்கள். ஆனால் அதனுடைய உண்மையான காரணம் என்னவென்றால் நாம் கிளம்பும்போது தடிக்கினால் ஒருவிதமான பதற்றம் ஏற்படும். அதனால் நாம் செய்யக்கூடிய செயல் சரியாக செய்ய முடியாமல் போகலாம். அதாவது வண்டி ஓட்டும்போது பதற்றம் ஏற்படலாம். எனவே, தண்ணீர் குடித்துவிட்டு செல்வதால் நமக்கு ஏற்படும் பதற்றம் குறைந்து சரியாக செயல்பட உதவும்.
1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்-னு சொல்வது ஏன் சில வியப்பூட்டும் தகவல்கள்