Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

விவசாயி செய்த மகாதர்மம் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15

  • April 17, 2021
  • 276 views
Total
15
Shares
15
0
0

அன்றைய காலங்களில் பழமொழிகளும் வாய்வழிக் கதைகளும் போல இன்று வாட்ஸ்அப் கதைகள் பரவுகின்றன. யார் உருவாக்கினார் என்பது குறிப்பிடப்படாத பட்சத்தில் தெரியாமல் இருக்கும் இக்கதைகள் பொதுவாக நகைச்சுவைகள், மக்களது வாழ்வியல் மற்றும் தத்துவங்களைக் கூறுகின்றன. அவ்வாறான சுவாரசியக் கதைகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பிக்கிறோம். பதினைந்தாவது கதை, விவசாயி செய்த மகாதர்மம் இதோ,

விவசாயி செய்த மகாதர்மம்  : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15
image source

விவசாயி செய்த மகாதர்மம்

மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகருக்கு புறப்பட்டார். வழியில் பசித்தால் உதவும் என்று சில ரொட்டிகளை பொட்டலமும் கட்டிக் கொண்டார். வழி நெடுக திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டுமே என்றும் கடவுளை வேண்டிக் கொண்டே வந்தார்.

விவசாயி செய்த மகாதர்மம்  : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15
image source

பசி எடுக்கவே ஒரு குளக்கரையில் அமர்ந்து எடுத்து வந்த ரொட்டியை சாப்பிட கையில் எடுத்தார். மனதிற்குள் இந்த உணவைக் கொடுத்த கடவுளுக்கு விவசாயி நன்றி சொன்னார். அப்போது தெரு நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது. இரக்கப்பட்ட விவசாயி. ஒரு ரொட்டியை அதனிடம் வீசினார்.

அந்த நொடியே ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய் மீண்டும் ஆவலுடன்
பார்த்தது. இரக்கப்பட்ட விவசாயி, அத்தனை ரொட்டியையும் ஒவ்வொன்றாக முழுவதையும் நாய்க்கே கொடுத்து விட்டார். ஒரு வேளை சாப்பிடாவிட்டால் உயிரா போய் விடும் ? என்று நினைத்து, அரசர் அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால், நாட்டின் பிரஜையான நாமும், நம்மால் முடிந்ததை பிற உயிர்க்கு செய்வது தானே முறை என தனக்கு தானே, சமாதானமும் சொல்லிக் கொண்டார்.

விவசாயி செய்த மகாதர்மம்  : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15
image source

பசியை பொறுத்துக் கொண்டு தலைநகரை அடைந்தார். அங்கிருந்த தர்ம
சத்திரத்தில் சாப்பிட்டார். பிறகு மன்னனை சந்தித்து தான் வந்த விஷயத்தைச் சொன்னார். மன்னர் போஜன் விவசாயிடம் என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே, நீங்கள் ஏதாவது உங்கள் வாழ்வில் தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள், அதை நிறுக்கும் தராசு என்னிடம் இருக்கிறது, அது எந்த அளவு எடை காட்டுகிறதோ அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் மன்னர்.

தர்மம் செய்யும் அளவு பணம் என்னிடம் இருந்தால், பணம் வேண்டி உங்களிடம் ஏன் நான் வரப் போகிறேன் ? ஆனால், வரும் வழியில் பசித்திருந்த நாய்க்கு உணவளித்தேன். அதற்கும் ஈடாகவே, உங்கள் தர்ம சத்திரத்தில் நான் சாப்பிட்டும் விட்டேன்.

எனவே நான் ஏதும் பெரிதாக தர்மம் செய்ததில்லை‌ என்று அடக்கமாக சொன்னார் விவசாயி, உங்கள் பசியை பொறுத்து கொண்டு, தெரு நாய்க்கு உணவிட்டதும்,
ஒரு வகை புண்ணியமே என்று போஜன் தராசை கையில் எடுத்தார்.

தர்மம்
image source

ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும், மறு தட்டில் தங்கத்தையும் வைத்து நிறுத்தார் மன்னர், கஜனாவில் இருந்த தங்கம் முழுதும் வைத்தும் கூட தராசுத்தட்டு சமமாகவில்லை.

வியந்த மன்னன் உங்களை பார்த்தால், சாதாரணமானவராக தெரிய
வில்லை, என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார் ? என்றார். மன்னா
நான் ஒரு சாதாரண விவசாயி, என்னைப் பற்றி பெரிதாக சொல்லுமளவு வேறு ஏதுமில்லை என்றார் பணிவுடன்.

அப்போது தர்ம தேவதை அங்கு தோன்றினாள்,

போஜனே..! தராசில் நிறுத்துப் பார்த்து அளவிடுவது அல்ல தர்மம், கொடுத்தவரின் மனமே, அதனது அளவுகோல், இவர் மனம் மிகப் பெரியது, பகட்டுக்காக தர்மம் செய்யாமல், பிரதிபலனை எதிர்பாராமல் ஆத்மார்த்தமாக ஒரு உயிருக்கு தன்னிடம் இருந்த உணவை மொத்தமாக கொடுத்து விட்டார்.

அதனால் நீ எவ்வளவு பொன் வைத்தாலும், தராசு முள் அப்படியே தான் இருக்கும், ஆகவே அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ, அதை கேட்டு கொடுத்தால் போதுமானது என்றாள்.

இதை ஏற்ற மன்னன் விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழி அனுப்பினார். விவசாயி மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தினார்.

கருத்து :

ஆத்மார்த்தமாக முழு மனதுடன், பலனை எதிர்பாராமல், கபட வேடமின்றி உன் தர்மத்தை செய், அதன் பலன் தானாகவே நிச்சயம் வரும். அதுவே உலகின் மிகச் சிறந்த தர்மமாகும்.

இதே போன்ற நல்ல கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறோம். அது வரை எமது பழைய கதைப் பதிவுகளை வாசிக்கலாமே

கதைகள் பகுதிக்கு செல்ல இங்கே அழுத்தவும்

எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்

Facebook 4K Likes

கதை பதிப்புரிமை :
குருதேவ் பிரிண்டர்ஸ்
ஊத்துக்கோட்டை

Post Views: 276
Total
15
Shares
Share 15
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
யோகி பாபு

முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் நடிகர் யோகி பாபு மீது புகார்..!

  • April 17, 2021
View Post
Next Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 45

  • April 18, 2021
View Post
You May Also Like
வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17
View Post

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17

மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து - வாங்க சிரிக்கலாம்
View Post

மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து – வாங்க சிரிக்கலாம்

பல
View Post

பல வருட தேடல் ஒரு நொடி கவனச்சிறதல் குட்டிக் கதை.!!

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து   | க16
View Post

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து | க16

கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?
View Post

கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?

கோபத்தோடு
View Post

கோபத்தோடு எழுபவன் தோல்வியுற்று அமருவான்.

மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1
View Post

மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

பள்ளி மாணவி
View Post

இப்படியும் ஒரு பள்ளி மாணவி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.