இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021-2022 பிலவ வருடத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ இருக்கின்றது?
உலகத் தமிழர்களால் ஏப்ரல் 14ஆம் தேதி புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோவில்களுக்கு சென்றும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் தமிழ் வருடப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
உணவு :
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.
மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம்.
வாழ்க்கை என்றாலே கசப்பும், இனிப்பும் கலந்ததுதான். இப்புத்தாண்டிலும் கசப்பும், இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.
இந்நாளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
புது வருட துவக்கம் :
பிலவ தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சித்திரை மாதம் 01ஆம் நாள் புதன்கிழமை இன்று அதிகாலை 02.31 மணிக்கு துவங்கியது. இடைக்காடர் சித்தர் இயற்றிய தனது நூலான ‘அறுபது வருட வெண்பா” என்ற நூலில் பிலவ வருடம் பற்றி உள்ள பாடல் பின்வருமாறு
பிலவத்தில் மாரி கொஞ்சம் பீடை மிகும் ராசர் சல மிகுதி துன்பம் தரும் நலமில்லை நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மை பாலுமின்றிச் செய்புவனம் பாழ்
பாடலின் பலன்கள் :
பிலவத்தில் மழை அளவு குறைவாக இருக்கும். நாட்டை ஆளுகின்ற அரசர்களுக்கு நோய் உண்டாகும். ஆடு, மாடுகள் முதலான கால்நடைகள் துயரத்தை அனுபவிக்கும். பயிர்கள் செழித்து வரும் வேளையில் பருவம் மாறி பெய்த மழையால் விவசாயிகள் துன்பம் அடைவார்கள் என்று வெண்பா கூறுகிறது.
பிலவ வருடம் பொதுவான பலன்கள் :
- மருத்துவ துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
- கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.
- ஆன்மிகம் சார்ந்த துறைகளில் சில சலுகைகள் கிடைக்கும்.
- விவசாயம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும்.
- வங்கி துறைகளில் மாற்றமான சூழல் ஏற்பட்டு மறையும்.
- வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு மறையும்.
- இன்டர்நெட் மற்றும் டவர் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும்.
பிலவ வருடத்தில்.. திருமண யோகம் பெறும் ராசிக்காரர்கள் யார்?
- ரிஷபம்
- மிதுனம்
- கடகம்
- சிம்மம்
- துலாம்
- விருச்சிகம்
- மகரம்
- கும்பம்
பிலவ வருடத்தில் புத்திர யோகம் பெறும் ராசிக்காரர்கள் யார்?
- மேஷம்
- மிதுனம்
- சிம்மம்
- கன்னி
- கும்பம்
பிலவ வருடத்தில்.. அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார்?
- மேஷம்
- ரிஷபம்
- சிம்மம்
- கன்னி
- தனுசு
- கும்பம்
சித்திரை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் !!
சித்திரை மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் உங்கள் வாழ்வை வளமாக்கும் என்று கூறுவார்கள். அதில் பரணி விரதம், சித்ரா பௌர்ணமி, சௌபாக்கிய சயனவிரதம், பாபமோசனிகா ஏகாதசி போன்ற விரத முறைகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
பரணி விரதம் :
சித்திரை மாதம் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவருக்கு பூஜை செய்ய வேண்டும். பைரவருக்கு தயிர்சாதம் படைத்து விரதம் இருந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். நமக்கு தீங்கு செய்த எதிரிகள் பாதிக்கப்படுவர். வாழ்வில் வளம் சேர்க்க இந்த விரதம் ஏற்றது. இதனை பரணி விரதம் என்பர்.
சௌபாக்கிய சயனவிரதம் :
சித்திரையில் வரும் சுக்கிலபட்ச திரிதியை திதியில் உமாமகேஸ்வரரை துதித்து பூஜை செய்வது மிகவும் நல்லது. அன்று தான, தர்மங்கள் செய்வதால் இப்பிறவியில் வளமான வாழ்வும் மறுபிறவியில் கைலாச லோக பிராப்தியும் கிடைக்கும். இதை சௌபாக்கிய சயனவிரதம் என்பர்.
சித்ரா பௌர்ணமி
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமான், அம்பிகை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விழாவன்று மக்கள் பொங்கலிட்டும், அன்னதானம் செய்தும் வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.
சித்ரா பௌர்ணமி அன்று பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். தங்கள் வாழ்வில் செய்த பாவங்களைப் போக்குமாறும், இனி வரும் நாளில் பாவங்கள் செய்யாமல் இருக்க அருள் புரியுமாறும் வேண்டுகின்றனர். நிலையான செல்வம், நீடித்த ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.
பாபமோசனிகா ஏகாதசி :
சித்திரை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி பாபமோசனிகா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபமோசனிகா ஏகாதசி அன்று விரதம் மேற்கொண்டு திருமாலை வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கும்.
பிலவ புதுவருடப்பிறப்பு வாழ்த்துக்கள் – 2021 ராசி வரவு – செலவு பலன்
எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்