உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்வதும், புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கம்.
இன்றே புகைப்பதை நிறுத்துவீர்களேயானால்
20 நிமிடங்களில்
உங்கள் இரத்த அழுத்தமானது வழமைக்கு திரும்பும்.
08 மணித்தியாலங்களில்
உடல் இரத்தோட்டத்தில் காணப்படும் காபன் மெனோக்சைட்டின் (Toxicgas ) அளவு அரைவாசியாக குறைந்து ஒட்சிசனின் அளவு வழமைக்கு திரும்பும்.
48 மணித்தியாலத்தில்
இதய நோய்க்கான வாய்ப்பு குறைவடைவதோடு எல்லா நிக்கோட்டின் ( Nicotine ) அகன்று உங்கள் நாக்கில் சுவை, மூக்கில் மனம் உணரத் தொடங்குவீர்கள்.
72 மணித்தியாலத்தில்
உங்கள் சுவாசக்குழாய் தெளிவடைந்து உங்களது ( Energy Level ) சக்தி அதிகரிக்கும்.
02 கிழமைகளில்
உங்களது இரத்த ஓட்டம் அதிகரித்து அடுத்து 10 கிழமைக்குள் துரிதமாக முன்னேற்றமடையும்.
3-9 மாதங்களில்
இருமல் மூச்சு விடும் பிரச்சினை சீராகி சுவாசப்பையானது 10% முன்னேற்றம் அடையும்.
01 வருடத்தில்
இருதய நோய் ஏற்படும் சாத்தியம் அரைவாசியாக குறைவடையும்.
05 வருடங்களில்
பாரிசவாதத்துக்கான சாத்தியம் புகைக்காத ஒருவருடைய ( Non Smoker ) நிலைக்கு மாற்றம் அடையும்.
10 வருடங்களில்
சுவாச புற்றுநோய்க்கான சாத்தியம் அற்று ( Non Smoker ) ஒரு புகைக்காத ஒருவர் சுவாசிப்பதை போன்ற நிலையை ஏற்படுத்தும்.
15 வருடங்களில்
இதய நோய் வரும் வாய்ப்பு புகைக்காத ஒருவருடைய ( Non Smoker ) நிலைக்கு ஒத்ததாகும்.
இது போன்ற உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுகாதாரம் பகுதிக்கு செல்லுங்கள்.