- நடிகர்: தனுஷ்
- நடிகை: ஐஸ்வர்யா லட்சுமி
- இயக்குனர்: கார்த்திக் சுப்பாராஜ்
- இசை: சந்தோஷ்நாராயணன்
மதுரையில் பரோட்டா கடை நடத்தி வருகிறார் நடிகர் தனுஷ். இவர் மதுரையில் சின்ன சின்ன ரவுடிசமும் செய்து வருகிறார்.
இதே சமயம் லண்டனில் பீட்டர் மற்றும் சிவதாஸ் தலைமையில் இரண்டு மாஃபியா குழுக்கள் அங்கு இருக்கின்றன. பணம் கிடைக்கும் என்பதற்காக சிவதாஸை அழிக்க, மதுரையில் இருந்து லண்டன் செல்கிறார் தனுஷ். அங்கு சிவதாஸிடம் மறைமுகமாக பேசி வரும் தனுஷ், அவருக்கு துரோகம் செய்து அவரை கொலை செய்கிறார்.
அதன் பின் லண்டனில் பரோட்டா கடை வைத்து ஐஸ்வர்யா லட்சுமியை காதலித்து கொண்டு இருக்க சிவதாஸின் நண்பர்கள் தனுஷை துப்பாக்கியால் சுட்டு விடுகின்றனர்.
இதற்கு ஐஸ்வர்யா லட்சுமி உதவி புரிகிறார் இறுதியில் தனுஷ்க்கு என்ன நடந்தது? ஐஸ்வர்யா லட்சுமி சிவதாஸின் நண்பர்களுக்கு உதவி செய்தமைக்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்
ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பாகவே நடித்திருக்கிறார். பிளாஷ்பேக் சொல்லும் காட்சியில் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார்.
மாபியா கும்பல் கதையை வைத்து அதில் ஈழத்தமிழர்கள், அரசியல், காதல் என படத்தை சுவாரஸ்யமாக எடுத்து உள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு இன்னும் மெருகூட்டுகின்றன. பல காட்சிகளை இவருடைய இசை தாங்கிப் பிடித்து இருக்கிறது. குறிப்பாக தனுஷ் நான் தான் டா மாஸ் பாடல் காட்சியில் துப்பாக்கி எடுத்து வரும்போது பின்னணி இசை மெய்சிலிர்க்க வைக்கிறது.
மதுரை மண்ணின் அழகையும், லண்டன் அழகையும் மாறாமல் படம் பிடித்திருக்கிறது. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
ஜகமே தந்திரம் சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா
இதுபோன்ற சுவாரசியமான சினிமா செய்திகளுக்கு எமது சினிமா பக்கத்தை நாடவும்.