Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17

  • May 22, 2021
  • 328 views
Total
1
Shares
1
0
0

அன்றைய காலங்களில் பழமொழிகளும் வாய்வழிக் கதைகளும் போல இன்று வாட்ஸ்அப் கதைகள் பரவுகின்றன. யார் உருவாக்கினார் என்பது குறிப்பிடப்படாத பட்சத்தில் தெரியாமல் இருக்கும் இக்கதைகள் பொதுவாக நகைச்சுவைகள், மக்களது வாழ்வியல் மற்றும் தத்துவங்களைக் கூறுகின்றன. அவ்வாறான சுவாரசியக் கதைகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பிக்கிறோம். பதினைந்தாவது கதை, கடவுள் வைத்த கடிதம் இதோ,

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள்
image source

கதை 17 : கடவுள் வைத்த கடிதம்

ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.

ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்.

சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும்,
அந்த சிறுவன் நான் இப்போது வளர்ந்திருக்கிறேன், இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான்.

சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள்.

ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற, “எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறீர்கள்” என்றான் அந்த சிறுவன்.

ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக “மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது” என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார்.
பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை.

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17
image source

முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும், த்ரில்லாகவும் இருந்தது. ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான்.

கொஞ்ச நேரம் தான், கசகசவென சப்தம் அந்நியர்கள் வருவதும் போவதுமான சூழல், ஒருவருக்கு ஒருவர் உருவாக்கும் சப்தம், மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்குகிறான்.

அடுத்த ஊரில் அருகில் இருந்தவர் இறங்கிக் கொள்ள புதிதாக வந்தவரின் சோகமான முகமும், எதிரே வந்து அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும், நம் சிறுவனுக்கு சங்கடத்தைத் தருகிறது.

இப்போது கொஞ்சம் பயப்படத் தொடங்குகிறான். வயிறு வலிப்பது போல் தெரிகிறது. ரயிலின் வேகத்தைப் போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாகத் துடிப்பது போல் இருக்கிறது.

ஜன்னலோர இருக்கையில் தலையைத் தாழ்த்தி, மூலையில் பதுங்கிக் கொள்கிறான், அவன் கண்களில் கண்ணீர் எழுகிறது. அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது தந்தை, சட்டைப் பையில் எதையோ வைத்தது நினைவுக்கு வருகிறது.

நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரிக்கிறான்,
அதில், பயப்படாதே மகனே,நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன் என்று எழுதி இருந்தது. கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை முகத்தில் எழுகிறது. பயம் அகன்று நம்பிக்கையின் புதிய கதிர் புன்னகைக்கிறது.

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17
image source

பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி, அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து அமர்கிறான்.

இதே சூழல் தான் இப்போது நமக்கும் இருக்கிறது. மகிழ்ச்சியாக வாழ்ந்த அதே ஊரில் அச்சத்தோடு இருக்கிறோம்.

நோயை விட,அது குறித்த அச்சம் தான் பலரைக் கொல்கிறது. எல்லோரும் இறைவனை நம்புகிறோம். நிச்சயமாக அவன் நம்மை நிராதரவாக விட மாட்டான்(ர்), என்ற உறுதி எல்லோருக்கும் இருக்கிறது.

இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியபோது, ​​ நம் இதயத்தில் இறைவன் ஒரு காகிதத்தை வைத்திருக்கிறான். அதில் உன்னோடு நான் இருக்கிறேன், உன்னோடு பயணம் செய்கிறேன், என்று எழுதி இருக்கிறது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு இதயத்தின் ஆழத்தில் எழுகிற நம்பிக்கை துணை இருக்கிறது. அழைக்கிற குரலுக்கு வருவேன் என்று கீதையில் கண்ணன் சொல்கிறார். வருத்தப் பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக இயேசு கூறுகிறார். கேட்கும் கைகளை வெறும் கையாக விடமாட்டேன் என்று அல்லாஹ் நம்பிக்கை தருகிறார்.

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17
image source

கடவுளின் பெயரால் கலவரம் செய்து பழகிவிட்ட நமக்கு, இருளுக்குப் பிறகு வெளிச்சமும், இன்னலுக்குப் பிறகு மகிழ்ச்சியும் தருவதாக இறைவன் சொன்ன சத்திய வார்த்தைகள் மறந்து விட்டன.

எனவே, பீதியும், மனச்சோர்வும் அடையாமல் இருப்போம். பயமும் அச்சமும்
நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.

கருத்து :

உலகம் பிழைக்கப் போராடும் இந்த நிச்சயமற்ற காலத்திலும் நம்பிக்கையோடு இருப்போம். இரவுக்குப் பிறகு பகல் வரும் என்பது எப்படி நிச்சயமோ, அதைப்போல் இந்த இன்னலுக்குப் பிறகும் மகிழ்ச்சி வரும்.

இதே போன்ற நல்ல பதிவுடன் அடுத்த வாரம் சந்திக்கிறோம். அது வரை எமது பழைய கதைப் பதிவுகளை வாசிக்கலாமே.

கதைகள் பகுதிக்கு செல்ல இங்கே அழுத்தவும்

எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்

Facebook 4K Likes
Post Views: 328
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
ஒரு ரிங் அடித்து கட் ஆகும் வெளிநாட்டு இலக்கங்களில் அழைப்பு வருகிறதா ? எடுக்காதீர்கள்

ஒரு ரிங் அடித்து கட் ஆகும் வெளிநாட்டு இலக்கங்களில் அழைப்பு வருகிறதா ? எடுக்காதீர்கள்

  • May 22, 2021
View Post
Next Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 50

  • May 23, 2021
View Post
You May Also Like
மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து - வாங்க சிரிக்கலாம்
View Post

மீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து – வாங்க சிரிக்கலாம்

பல
View Post

பல வருட தேடல் ஒரு நொடி கவனச்சிறதல் குட்டிக் கதை.!!

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து   | க16
View Post

வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து | க16

விவசாயி செய்த மகாதர்மம்  : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15
View Post

விவசாயி செய்த மகாதர்மம் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15

கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?
View Post

கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?

கோபத்தோடு
View Post

கோபத்தோடு எழுபவன் தோல்வியுற்று அமருவான்.

மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1
View Post

மொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1

பள்ளி மாணவி
View Post

இப்படியும் ஒரு பள்ளி மாணவி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.