இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
கோவிலின் வாசற்படியை எப்படி கடக்க வேண்டும்?
நம்மில் பெரும்பாலானோர் குறைகளை கொட்டுவதற்கும், தேவைகளை கேட்பதற்குமே திருக்கோவில்களை தேடிச் செல்கிறோம். மிகச் சிலரே நம்மை காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லவும், அமைதி தேடவும் கோவில்களுக்கு செல்கிறார்கள்.
கோவிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும் ஒரே கேள்வி.. கோவிலுக்கு போகும் முன் கோவில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா? இல்லை தாண்டி செல்ல வேண்டுமா? என்ற குழப்பம் இன்றும் அனைவரின் மனதில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. அதை பற்றி பார்க்கலாம்…
கோவிலுக்கு செல்லும் முன்
கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் கோவிலுக்கு அருகாமையில் ஏதேனும் தண்ணீர் குழாய்கள் கண்டிப்பாக இருக்கும். அதில் கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகு தான் கோவிலின் உள்ளே செல்ல வேண்டும்.
குறிப்பாக கை, கால்களை கழுவிய பிறகு ஒரு சொட்டு நீரை தலையில் தெளித்து கொள்ள வேண்டும்.
அடுத்து கோவிலுக்குள் செல்லும் முன்பு அங்குள்ள கோவில் கோபுரத்தையும், கலசத்தையும் வணங்கி விட்ட பிறகுதான் கோவிலின் உள்ளே செல்ல வேண்டும்.
கோவிலுக்கு செல்லும் முன் அனைவரும் கோவில் படிக்கட்டை குனிந்து வலது கை விரல்களால் படிக்கட்டை தொட்டு புருவத்தின் இடையில் தொட்டு அழுத்த வேண்டும்.
இப்படி செய்வதால் நாம் கோவிலுக்குள் சென்றதும் நமது பாதத்தின் வழியே கோவிலின் நேர்மறை ஆற்றல்கள் நமது உடலில் செயல்பட தூண்டும்.
வாசற்படியை மிதித்து சென்றால் என்ன அர்த்தம்?
கோவில் படிக்கட்டை தாண்டாமல், மிதித்து சென்றால் மனதில் உள்ள பிரச்சனைகளை கூடவே கோவிலுக்குள் அழைத்து செல்வதாக அர்த்தம்.
வாசற்படியை தாண்டித்தான் செல்ல வேண்டுமா?
கோவிலில் குறுக்கே இருக்கும் வாசற்படியை தாண்டித்தான் நாம் செல்ல வேண்டும். கோவில் படியை தாண்டி செல்வதால் நமது மனதில் இருக்கும் கவலைகள், கெட்ட விஷயங்கள், எதிர்மறை எண்ணங்கள் போன்ற அனைத்தையும் வெளியில் விட்டு செல்வதாக ஐதீகம். அதாவது நமது பிரச்சனைகளை தாண்டி செல்கிறோம் என்று பொருள்.
வாசற்படியை தாண்டி செல்வதற்கான காரணம் என்ன?
கோவிலில் தினந்தோறும் அர்ச்சகர்கள் கூறும் மந்திர ஒலி, நாதஸ்வரம், மேள சப்தங்கள் போன்றவை கோவிலில் நிறைந்து இருக்கும். இதனால் கோவில் வாசற்படியை மிதித்து செல்லாமல் பக்தர்கள் கட்டாயமாக தாண்டித்தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்.