கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
நந்தியை கனவில் கண்டால் என்ன பலன்? நந்தியை கனவில் கண்டால் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
சூரிய கிரகணம் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும்போது சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
திருமணம் ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமணம் ஆவது போல் கனவு கண்டால் உங்கள் தூரத்து அல்லது நெருங்கிய சொந்தங்களின் மரணம் நிகழும் என்தை குறிக்கின்றது.
இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு திருமண பேச்சு வார்த்தை நடக்கும் என்பதைக் குறிக்கின்றது.
யானைகளை கனவில் கண்டால் என்ன பலன்? யானைகளை கனவில் கண்டால் மனதில் நினைத்த செயல்களில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
முதலை வீட்டில் இருந்து வெளியே செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.
பூக்களை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.
செருப்பு காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
பெண்கள் வேல் பச்சை குத்துவதுவது போல் கனவு கண்டால் என்ன பலன் ? பெண்கள் வேல் மற்றும் பச்சை குத்துவதுவது போல் கனவு கண்டால் கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதை குறிக்கின்றது.
ஆண்கள் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன் ?
ஆண்கள் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் இன்னல்கள் குறையும் என்பதை குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்