Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
சிற்றின்பம்.

சிற்றின்பம் – பேரின்பம் என்பவற்றுக்கிடையில் 50 வேறுபாடுகள்

  • October 12, 2020
  • 670 views
Total
7
Shares
7
0
0

மனிதர் வாழ்க்கையில் கிடைக்கும் இன்பங்கள் இரண்டு வகை. சிற்றின்பம் மற்றும் பேரின்பம். இவற்றில் ஒன்று வாழ்க்கைக்கு நல்லது, மற்றது அவ்வளவு நல்லதல்ல. ஆகவே, அவற்றை எப்படிப் பிரித்துப் பார்ப்பதென இந்தப் பதிவில் பார்ப்போம்.

இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம்

  1. படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.
    படைத்தவனால் ஈர்க்கப் பட்டால் பேரின்பம்
  2. படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.
    படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்
  3. படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்
    படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.
  4. என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்
    இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.
  5. நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்
    நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.
  6. அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.
    அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.
  7. செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.
    செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.
  8. செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.
    செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.
  9. புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.
    அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.
  10. இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.
    வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.
சிற்றின்பம் - பேரின்பம் என்பவற்றுக்கிடையில் 50 வேறுபாடுகள்
IMAGE SOURCE
  1. நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.
  2. உடலோடு மனதை தொடர்புப் படுத்துவது சிற்றின்பம்.
    உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.
  3. இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.
    துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.
  4. எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.
    எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.
  5. பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.
    மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.
  6. பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.
    பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.
  7. சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.
    எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.
  8. பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.
    தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.
  9. அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.
    அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.
  10. அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.
    அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.
சிற்றின்பம்
IMAGE SOURCE
  1. அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.
    அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.
  2. பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.
    பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.
  3. முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.
    முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.
  4. இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.
    கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.
  5. உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.
    உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.
  6. புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.
    புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.
  7. மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.
    மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.
  8. மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.
    மரணத்தையும் வெல்வது பேரின்பம்.
  9. மனமாய் இருந்தால் சிற்றின்பம்.
    மனதைக் கடந்தால் பேரின்பம்.
  10. வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.
சிற்றின்பம் - பேரின்பம் என்பவற்றுக்கிடையில் 50 வேறுபாடுகள்
IMAGE SOURCE
  1. பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.
    மொத்தமாய் கண்டால் பேரின்பம்.
  2. அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்
    அகங்காரம் துறந்தால் பேரின்பம்.
  3. தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்
    அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.
  4. ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.
    ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.
  5. துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.
    துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.
  6. ஜீவராசிகளால் தர முடிந்தது சிற்றின்பம்.
    இறைவனால் தரப் படுவது பேரின்பம்.
  7. உலகைப் பற்றினால் சிற்றின்பம்.
    இறைவனைப் பற்றினால் பேரின்பம்.
  8. பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.
    தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.
  9. இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்
    இன்பமான இன்பமே பேரின்பம்.
  10. அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.
    ஞானம் விரும்புவது பேரின்பம்.
சிற்றின்பம் - பேரின்பம் என்பவற்றுக்கிடையில் 50 வேறுபாடுகள்
image source
  1. பெற்று மகிழ்வது சிற்றின்பம்.
    கொடுத்து மகிழ்வது பேரின்பம்.
  2. சக்தியை இழப்பது சிற்றின்பம்.
    சக்தியாய் மாறுவது பேரின்பம்.
  3. பற்றுக் கொள்வது சிற்றின்பம்.
    பற்றற்று இருப்பது பேரின்பம்.
  4. மாறுவது, தாவுவது சிற்றின்பம்.
    மாறாதது நிலைத்தது பேரின்பம்.
  5. நிலையற்றது சிற்றின்பம்.
    நிரந்தரமானது பேரின்பம்.
  6. உலக வாழ்க்கை வாழ்வது நிலையற்ற சிற்றின்பம்
    இறைவன் திருவடியை அடைவது நிலையான பேரின்பம்
  7. இல்லற வாழ்க்கை வாழ்வது சிற்றின்பம்.
    இல்லறத்தில் இருந்து கொண்டு இயற்கையை (பஞ்ச பூதங்கனை)நினைத்து நினைத்து வாழ்வது பேரின்பம்
  8. நிலையற்றது சிற்றின்பம்.
    நிலையானது பேரின்பம்.
  9. நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்
  10. தான் மட்டும் அறிவது சிற்றின்பம்.
    பெற்ற அறிவை மற்றவர்க்கும் பகிர்வது பேரின்பம்
சிற்றின்பம் - பேரின்பம் என்பவற்றுக்கிடையில் 50 வேறுபாடுகள்
image source

எல்லா மதங்களும் மறைமுகமாக சொல்வதும் இதனையே

பதிவு : யோகி காகஜபுண்டர் கோபிநாத்

அருந்தமிழ் மருத்துவம் 500 : நோய்க்கெல்லாம் தீர்வாகும் பாடல்

மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

இது போன்ற வேறுபட்ட பதிவுகளுக்கு எமது கலாச்சாரத் தகவல்கள் பகுதியைப் பார்வையிடவும்.

Post Views: 670
Total
7
Shares
Share 7
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
எடை இழப்பு

விரைவான எடை இழப்புக்கு 8 இலகுவான வழிகள்

  • October 12, 2020
View Post
Next Article
CSK பிளே ஓஃப்ஸுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறதா? 2010 ரீவைண்ட்

CSK பிளே ஓஃப்ஸுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறதா? 2010 ரீவைண்ட்

  • October 13, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.