Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
ஐயப்ப

ஐயப்ப பக்தர்கள் கறுப்பு ஆடை அணிவது-நெய் கொண்டு செல்வது ஏன்?

  • December 15, 2020
  • 465 views
Total
5
Shares
5
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.

ஐயப்ப பக்தர்கள் கறுப்பு நிற ஆடை அணிவது ஏன்?… தெரிந்து கொள்வோம்…!!

சாமியே சரணம் ஐயப்பா” என்று சரண கோஷம் சொல்லிக் கொண்டு சபரிமலைக்கு போகும் பக்தர்கள் ஏன் கறுப்பு நிறை ஆடை அணிகிறார்கள் ஏன் தெரியுமா?

சபரிமலைக்கு மாலை அணிகின்றவர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதும், ருத்திராட்ச மாலையிட்டு கொள்வதும் ஏன்? வேறு ஏதேனும் நிறம் கொண்ட மாலை அணிவதால் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படுமோ? என்று பக்தர்கள் கேள்வி எழுப்புவதுண்டு.

சபரிமலைக்கு செல்லும் போது சில பிரதான ஆச்சாரங்களை கடைபிடித்தாக வேண்டும். அது இல்லாமல் போனால் சாதாரண மலையேறுவது போன்றாகிவிடும். கறுப்பு நிற ஆடை அணிந்து ஐயப்ப மந்திரங்களை உச்சரித்தால் பலன்கள் இருமடங்கு உண்டாகும். 

கறுப்பு நிற ஆடை அணிவதும், ருத்திராட்ச மாலை அணிவதும் சக்தியை அதிகரிக்க செய்யும்.

ருத்திராட்ச மாலை அணியும்போது 108, 64, 54, 48 என்ற அடிப்படையில் அதன் எண்ணிக்கை இருக்க வேண்டும். ருத்திராட்ச மாலை அணியும் முன்னர் சிவன் கோவிலிலோ, ஐயப்பன் கோவிலிலோ பூஜித்து அணிய வேண்டும்.

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பன் கோவிலில் நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடக்கும். ஆனால், தனி நெய்யையோ, தனி தேங்காயையோ நிவேதனம் செய்யமாட்டார்கள். தேங்காய்க்குள் நெய் ஊற்றி நெய் தேங்காயையே நிவேதனமாக்கினார்கள்.

நெய் தேங்காய் :

முக்கண் கொண்ட தேங்காய் சிவனை ஞாபகப்படுத்தும். பசு நெய் கோபாலனாகிய மகா விஷ்ணுவை நினைவுபடுத்தும். சிவன், விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் சக்தியாக அவதரித்தவர், ஐயப்பன். இதனால் சிவவிஷ்ணு வடிவமான நெய் தேங்காயை அவருக்கு நிவேதனம் செய்கின்றனர்.

What is that thing that devotees carry on their heads while going to the  Lord Ayyappa temple at Sabarimala? - Quora
image source

நெய் எதற்காக?

ஐயப்பனுக்கு காணிக்கையாய் நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

பந்தள மன்னனின் மனைவி வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை, புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள். தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான், ஐயப்பன்.

தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்ண உணவுகள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினார். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார்.

அந்த இருமுடிகளையும் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறை நாளடைவில் நிலைத்துவிட்டது.

இருமுடியில் நெய் தேங்காய் சுமந்து செல்வதற்கான காரணம் :

தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும், தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் ஐயப்பன் கூறினார்.

பந்தள மன்னன், மணிகண்டா! நீ காட்டுக்குள் குடியிருக்க போவதாய் சொல்கிறாய். நாங்கள் உன்னை காண வேண்டும் என்றால் மலைகளை கடந்து வர வேண்டும். வயதான நான் உன்னை காண எப்படி வருவேன்? என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம் என அருள்பாலித்தார்.

அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனை காண பந்தளராஜா மலைக்கு செல்வார். மகனை காண செல்லும்போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்து செல்வார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று. எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார்.

மேலும் நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். பந்தள மன்னன், ஐயப்பனை காண நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இதன்மூலம் இருமுடிகட்டில் நெய் தேங்காய் முக்கியமானது.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

திருமணத்தடை நீங்க குருபகவானின் அருளை பெற்றிடுங்கள்

இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.

wall image

Post Views: 465
Total
5
Shares
Share 5
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஜெமினிட் விண்கல் பொழிவு இன்று இரவு 8.30 முதல் நாளை 6.30 வரை

ஜெமினிட் விண்கல் பொழிவு இன்று இரவு 8.30 முதல் நாளை 6.30 வரை

  • December 14, 2020
View Post
Next Article
இந்தியா

இந்தியாவிடம் உலகம் கண்டு வியக்கும் 10+ தனித்துவங்கள்

  • December 15, 2020
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.