Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கர்ம வினை

கர்ம வினை என்றால் என்ன ? அது எப்படி நம்மை பாதிக்கிறது ?

  • November 6, 2020
  • 910 views
Total
1
Shares
1
0
0

நம் வாழ்வில் நடக்கும் எல்லாமே நம் கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப்படுபவர்களுக்கு சரியான பதில் , இருக்கின்றது ஆனால் இல்லை. முயற்சி உங்கள் கையில் : முடிவு கர்ம வினையின் கையில் என்கிறார், இலங்கை சித்தர்பீடத்தை சேர்ந்த யோகி காகஜபுண்டர் கோபிநாத் அவர்கள். கர்மா வினை பற்றிய அவரது அண்மைய வலைப்பதிவு உங்களுக்காக கட்டுரை வடிவில்

கர்ம வினை !

Why Karma Healing is Essential? கர்ம வினை
image source

 உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.அதிலும் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்ம வினையை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். 

சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். 

சிலருக்கு நல்லது செய்கிறோம். பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம்.இந்த கொடுக்கல் வாங்கலே “ருண பந்தம்” எனப்படுகிறது.

சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. 

பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது  என்று தெரியாமலேயே  தன் போக்கில்  நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 

கனவில் கூட காண முடியாத  பல ஆச்சர்யங்கள் நமக்கு  சிலசமயங்களில் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் ? ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை,  நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை,  தேர்ந்தெடுப்பதில்லை.

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம்  என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. 

முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? .

ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய் விடுவர்.

அது இறப்பால் மட்டும் அல்ல ,  பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும்  நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர்.

எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. 

அது என்ன ? 

Spiritual Meaning of Karma | LoveToKnow கர்ம வினை
image source

சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம வினை கதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை  ஏற்படுத்துகிறதா ? 

இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய  “கர்ம வினை” தான் .

 இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே “சஞ்சித கர்மா” எனப்படுகிறது.  அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே ‘பிராரப்தக் கர்மா’ எனப்படுகிறது.

இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.

இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக்கொடுக்கிறோம்.

இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

இது தவிர ‘ஆகாம்ய கர்மா’ என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல – கெட்ட செயல்களால் ஏற்படுவது. 

யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ  உருவாக்கவோ முடியாது.

அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும் .

துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்,  ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும்,  அவரவர்கள் கர்ம வினை கதியே.

இதைத் தான் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என நம் மதம் போதிக்கிறது.

 நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.

அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது.  இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும்,  நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன்  கையிலேயே உள்ளது. 

நீ செய்யும் நற்செயல்களையும்,  வினைச் செயல்களையும் நீ மட்டுமே எதோ  ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய்  என்பதை உணர்ந்தால்,நீ என்ன செய்யப் போகிறாய் ?எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது உனக்குப் புலப்படும்.

இதை போதிப்பது தான் “ஆன்மீகம்”

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது.  இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.

பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.

அதேபோல பெரும் பணக்காரர்களையும்  ‘துக்கங்கள்’ விடுவதில்லை.சர்க்கரை ஆலை அதிபரானாலும் நீரிழிவு இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. 

பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனது கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.

‘வினை விதைத்த வழியில் விதி நடக்கும்’ 

‘விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்’

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்.  நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.

எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை.

நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது. அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது..!!

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்

மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

wall image

Post Views: 910
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
உங்கள் சமையலறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சூப்பர் உணவுகள்!!

உங்கள் சமையலறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சூப்பர் உணவுகள்!!

  • November 5, 2020
View Post
Next Article
வாழ்க்கையை வென்ற ஜோ பிடனின் பற்றிய ஒரு சிறிய தகவல்!!

வாழ்க்கையை வென்ற ஜோ பிடனின் பற்றிய ஒரு சிறிய தகவல்!!

  • November 6, 2020
View Post
You May Also Like
தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?
View Post

தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?

View Post

2023ஐ மாற்றியமைக்க 9 வழிகள்…

பறக்க கூடிய ஹோவர்பைக் 2022ல் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு..!
View Post

பறக்க கூடிய ஹோவர்பைக் 2022ல் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

ஐயப்பன்
View Post

ஐயப்பன் விரத விதிமுறைகள் பற்றி தெரியுமா?

ஐயப்ப
View Post

பிறந்தது கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு..!

இரத்த அழுத்தம்
View Post

இரத்த அழுத்தம் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது..!

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!
View Post

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.