Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
விநாயகர்

துன்பங்கள் விலகி இன்பம் பெற வினை தீர்க்கும் விநாயகரை வழிபடுங்கள்..!

  • September 10, 2021
  • 462 views
Total
17
Shares
17
0
0
Girl Making a Garland by artist S Elayaraja | ArtZolo.com
image source

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

துன்பங்கள் விலகி இன்பம் பெற வினை தீர்க்கும் விநாயகரை வழிபடுங்கள்..!

மனிதர்கள் முதல் தேவர்கள் வரை, யாராக இருந்தாலும் எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை வழிபடுவது ஐதீகமாகும்

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகரும் கணங்களுக்கெல்லாம் அதிபதியும் விநாயகரை நாள்தோறும் வணங்கி வருவதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தை காண முடியும்.

சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை. கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வர முடியும்.

மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.

வினைகளை போக்குபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அது எவ்வித தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குவது நமது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு ஆவணி மாதம் 25ஆம் தேதி செப்டம்பர் 10ஆம் தேதி இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.

எப்படி வழிபாடு செய்வது?

Ganpati chocolate Modak for Ganesh Chaturthi
image source

வீட்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாசலில் மாவிலையைத் தோரணமாகக் கட்ட வேண்டும். பூஜையறையை நன்றாக சுத்தம் செய்து விளக்கு, பூஜை பொருட்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூஜையறையில் சிறியதொரு மனையை அமைத்து அதில் கோலமிட்டு இலையை வைத்து கொள்ளவும். இலையின் நுனியை வடக்குப் பார்த்தபடி வைப்பது சிறப்பு. பின் இலையின் மேல் பச்சரிசியை பரப்பி அதன் நடுவே விநாயகர் சிலையை வைக்க வேண்டும். விநாயகர் சிலையை உங்களுக்கு தகுந்தாற்போல் அழகுப்படுத்தி கொள்ளலாம்.

பிறகு விநாயகருக்கு பல வகையான மலர்கள் சூட்டி வழிபடலாம். பல வகையான பழங்களையும் விநாயகருக்கு படைக்கலாம். விநாயகருக்கு பிடித்த அருகம்புல் அல்லது எருக்கம்பூ மாலை செய்து அணிவிக்கலாம்.

Sri Sidhi Vinayak Ganesh Temple In Sriganganagar - गणपति दर्शन से होता है  जीवन सफल, कीजिए श्रीगंगानगर स्थित श्री सिद्धि विनायक गणेश मंदिर के दर्शन |  Patrika News
image source

விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

Vella Kozhukattai Recipe - Modakam (Mothagam) for Vinayaka Chaturthi -  Edible Garden
image source

விநாயகர் சதுர்த்தி நாளன்று விநாயகர் துதி, விநாயகரின் திருநாமங்கள், விநாயகர் அகவல் படித்து வணங்கலாம். விரதம் இருப்பவர்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல், பூஜைகளை முடித்து, விநாயகரை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

நாட்டையும், மக்களையும் காக்க இந்த ஆண்டு நாம் எளிமையாக விநாயகர் சிலைகளை வீட்டிலேயே வைத்து வணங்கி அனைத்து நலன்களையும் பெற வேண்டிக் கொள்வோம்.

நன்மைகள்

  • விநாயகரை மருத இலையால் வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும்.
  • அரச இலையால் வழிபட எதிரிகள் வீழ்வர்.
  • அகத்தி இலையால் வழிபட்டால் துயரங்கள் நீங்கும்.
  • வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும்.
  • வெள்ளெருக்கால் வழிபட சுகம் கிடைக்கும்.

துன்பங்கள் விலகி இன்பம் பெற வினை தீர்க்கும் விநாயகரை விரதமிருந்து வழிபடுங்கள்.

விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப்பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும்.

விக்னங்கள் யாவற்றையும் நீக்கி பக்தர்கள் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் வள்ளலுமாகிய விநாயக பெருமானை விநாயகர் சதுர்த்தி அன்று விரதமிருந்து வணங்கி பேரருள் பெற்றிடுவோமாக.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட தயாரா

wall image

Post Views: 462
Total
17
Shares
Share 17
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பிக்பாஸ்

எதிர்பாராததை எதிர்பாருங்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 5

  • September 9, 2021
View Post
Next Article
இலங்கை

இலங்கை-தென்னாபிரிக்கா மோதும் ரி -20 தொடர் இன்று ஆரம்பம்..!

  • September 10, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.