Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
ரகசியங்கள்

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!

  • October 30, 2020
  • 518 views
Total
9
Shares
9
0
0

ஒரு மனிதன் காலையில் எழுந்தது முதல் எவ்வாறான ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டுமென சித்தர்கள் குறிப்பிட்டுள்ள வாழ்வியல் இரகசியங்கள் பற்றிய பதிவு இது. இந்த கட்டுரையில் இருக்கும் தகவல்களை முதன் முதலில் பகிர்ந்த ரகு அவர்களுக்கு நன்றி.

இப்பொழுது இந்தக் கட்டுரைக்குள் செல்லலாம்

காலையில் எழுவது பற்றிய ரகசியங்கள்

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!
image source

படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்.

பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்.

காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில் ஒற்றி கொள்ளவேண்டும்.

கண்களை பற்றி நீங்கள் அறிய வேண்டிய ரகசியங்கள்

கண்கள் மனதின் வாசல், நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும், கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை

இதை தான் எரிச்சல் என்பார்கள். கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள்.

நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடைய காரணமும் இதுதான். இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது.

உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்

இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம்.

இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்.

அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .

மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி.

துரியோதனன் போருக்கு போகும் முன் தன் தாயிடம் ஆசி பெற செல்கிறான். எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .

ரகசியங்கள்
image source

அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .

குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .கிருஷ்ணர் சொல்கிறார் “பல வருடம் கண்களை கட்டி இருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்து இருக்கிறாள் .அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது” என்றார்.

இதை சித்தர்கள் நமக்கு இலகுவாக விளங்கும் படி பின்வருமாறு சொல்கிறார்கள்.

உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ண வேண்டும் அல்லது பார்த்து உண்ண வேண்டும். கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக் கொள்ள சொல்லபட்டதும் இதற்கு தான். வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்கு தான் .

குளியல் பற்றி நீங்கள் அறிய வேண்டிய ரகசியங்கள்

மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .

காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது. வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது, இது பசி எடுக்க வைக்கிறது .

பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது, துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாக்கிறது

சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும். ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும் பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள்.

இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .

உணவு பற்றி நீங்கள் அறிய வேண்டிய ரகசியங்கள்

சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும் மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெறிப்படுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .

அதன் படி உணவு முறைகளான இவைகள்,

  • நக்குதல் மூலம் சாப்பிடுவது
  • சப்புவதன் மூலம் சாப்பிடுவது
  • கடித்து சாப்பிடுவது
  • உறிந்து சாப்பிடுவது

என்று 4 வகையாக பிரிக்கலாம் .

எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .

சித்தர்கள் சொல்வது உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்களை குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில் அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும்.

இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .

கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும் சக்கரை நோய் வராது.

உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதங்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும். கைகளை பற்றி சில விவரங்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

உள்ளங்கை பற்றி நீங்கள் அறிய வேண்டிய ரகசியங்கள்

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!
image source

தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பி சாப்பிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .

பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை என்று சொல்கிறது.

இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது, எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும் என்று சொல்கிறார் .

மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில் தான் தேன் ஊற்றி அதில் மருந்துகளை குழைத்து உண்ண சொல்லி உள்ளார்கள்.

நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள். கைகளை வைத்து நோய்களை அறியலாம் . நகம் ,விரலில் உள்ள மச்சம், அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாங்களை வைத்து நோய்களை அறியலாம்.

மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம் அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை, கர்ம வினைகளை அகற்றலாம்.
இதுவே தீக்ஷை , இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள்.

கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன்

நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம். இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சூடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது.

இந்த சூடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்கு ஈரம் தேவை. (குளிர்ச்சி தேவை )

இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்.ஆம், லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது தான். செயல்களில் தவறினால் இங்கு சூடு அதிகமாகும் (காய்ச்சல்).

நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடையே நீர் அருந்த கூடாது. தாகத்தை ஏற்படுத்தும் லிங்கத்தை ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நனையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது. சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது.

உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் ஆகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவது இறைவன் நாமம் சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

நம்முடைய முன்னோர்கள், ஏன் பாட்டனார்கள் கூட இவ்வாறான பழக்கங்களை நிச்சயமாக கடைப்பிடித்துள்ளனர். நமது சந்ததிகள்தான் இவற்றைப் பற்றி முற்றாக அறியாமலே இருக்கின்றோம். இவ்வாறான தகவல்கள் கிடைப்பது மிக அரிது. தன்னலமற்ற முயற்சிகள் மூலமாக வெளிவரும் இவ்வாறான தகவல்களை நாம் எல்லோரிடமும் கொண்டு போய் சேர்ப்பிக்க வேண்டும்.

அருந்தமிழ் மருத்துவம் 500 : நோய்க்கெல்லாம் தீர்வாகும் பாடல்

மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

இது போன்ற சுவாரசியமான பதிவுகளுக்கும் கட்டுரைகளுக்கும் எமது தமிழ் கலாச்சாரம் பக்கத்தை பார்வையிடுங்கள்.

wall image

Post Views: 518
Total
9
Shares
Share 9
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கொரோனா

கொரோனா நோயிலிருந்து உங்களைக் காக்கும் தமிழ் மருத்துவ தேநீர்

  • October 29, 2020
View Post
Next Article
கொரோனா வெண்டிலேட்டர் சிகிச்சையின் கடும்வேதனை பற்றி தெரியுமா ?

கொரோனா வெண்டிலேட்டர் சிகிச்சையின் கடும்வேதனை பற்றி தெரியுமா ?

  • October 30, 2020
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.