Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
திருஷ்டி

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது திருஷ்டி கழிக்க தவறாதீர்கள்..!!

  • February 23, 2021
  • 336 views
Total
2
Shares
2
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

திருஷ்டி…!!

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி. அந்தக் கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுவிட்டது என்பர்.

கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர். பிறருடைய பார்வை மட்டும் அல்ல நம்மோட பார்வையே கூட சில சமயம் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அந்த வகையில் திருஷ்டி சுத்தி போடுவது எப்படி? என்பதை பற்றி பார்க்கலாம்.

திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?

மிளகாய், உப்பு, சிறிது தெருமண் இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு ஊருகண்ணு, உறவுகண்ணு, நாய்கண்ணு, நரிக்கண்ணு, நோய்கண்ணு, நொள்ளகண்ணு, கண்டக்கண்ணு, கள்ளக்கண்ணு, அந்தகண்ணு, இந்தகண்ணு எல்லாம் கண்ணும் பட்டுப் போக… கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுற்றி போடுவார்கள். இது ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!

திருஷ்டியை கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. ஆனால் திருஷ்டி கழிப்பவர் திருஷ்டி பட்டவரை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும். மேலும் கிழக்குத்திசையை நோக்கி நின்று கொண்டு திருஷ்டி கழிக்க வேண்டும்.

கழிக்கும் வகைகள்

கற்பூரத்தை ஏற்றி வலதுபுறமாக மூன்று முறையும், இடதுபுறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். இவ்வாறு போடும்போது கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரைந்துவிடுமாம்.

Image result for evil eye hindu
image source

பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சும் போது ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு.

Image result for evil eye hindu culture
image source

சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலதுபுறமாக மூன்று முறையும், இடதுபுறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும்.

Image result for evil eye hindu
image source

கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலதுபுறமாக மூன்று முறையும், இடதுபுறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க வேண்டும். அந்த உப்பு கரையும் பொழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும்.

வீடு, வண்டி வாகனம், வியாபாரம் செய்யும் இடங்களில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிந்தால் திருஷ்டி கழிந்துவிடும்.

பூசணிக்காயில் குங்குமத்தையும், சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.

Image result for evil eye hindu culture pumpkin
image source

ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.

வெற்றியைத் தரும் வெள்ளிக்கிழமை

இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.

wall image

Post Views: 336
Total
2
Shares
Share 2
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
நாசா அனுப்பிய பெர்ஸெவியரன்ஸ் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது

நாசா அனுப்பிய பெர்ஸெவியரன்ஸ் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது

  • February 22, 2021
View Post
Next Article
காமெடிக் கவிதைகள்

காமெடிக் கவிதைகள் : சும்மா வாசிச்சு பாருங்க – செவ்வாய் சிந்தனைகள் | சிந் -3|

  • February 23, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.