Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
சண்டிகேஸ்வரர்

யார் இந்த சண்டீகேஸ்வரர்? இவரை கைதட்டி வழிபடுவது சரியா?

  • April 22, 2021
  • 348 views
Total
1
Shares
1
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம். 

Lord Chandikeswarar
IMAGE SOURCE

சண்டிகேஸ்வரரை கைதட்டி வணங்கும் முறை சரியா?

சிவபெருமானை வணங்குபவர்கள் சண்டிகேஸ்வரரை வணங்காமல் இருக்க முடியாது. சிவபெருமான் கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருகையில் அவருக்கு இடது புறம் அமர்ந்திருப்பவர் சண்டிகேஸ்வரர். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சண்டிகேஸ்வரர் என்பதை விட, கைகளை தட்டி வணங்கும் தெய்வம் என்றால் எளிதில் நினைவிற்கு வரும்.

சிவன் கோவிலுக்குச் செல்கின்றவர்கள் அனைவரும், தவறாமல் சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு சென்று, கைகளை தட்டி வழிபட்டு செல்வார்கள். அப்படி சண்டிகேஸ்வரரை வழிபடும்போது கைகளை தட்டி வழிபடலாமா? கைதட்டி வணங்கும் முறை சரியா? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

யார் இந்த சண்டிகேஸ்வரர்?

பெரியபுராணத்தின் படி சண்டிகேஸ்வரரின் இயற்பெயர் விசாரசர்மன். இவர் சிறு வயதில் மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். இவரிடம் சிவ பக்தி மேலோங்கி இருந்ததால் மாடு மேய்க்கும் தொழில் செய்கையில் பணிக்கு இடையே மணலால் சிவலிங்கம் செய்து ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவருடைய வலிமையாலும், தன்னுடைய மேய்ப்பான் மீது கொண்டிருந்த அதீத அன்பினாலும் விசாரசர்மன் மேய்த்த மாடுகள் அந்த மணலால் உருவாக்கிய மணல் லிங்கத்தின் மீது தாமாகவே பாலை சுரந்து அபிஷேகம் செய்தன.

இந்த நிகழ்வு தினசரி நடந்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் இந்த நிகழ்வை பார்த்த மாட்டின் உரிமையாளர் விசாரசர்மனின் தந்தையான எச்சதத்தனிடம் சென்று, உங்கள் மகன் என்னுடைய பசுக்களை கொண்டு அவன் உருவாக்கிய மணல் லிங்கமான சிவனிற்கு அபிஷேகம் செய்து தியானிக்கிறான் இதனை கண்டியுங்கள் என புகார் அளித்தார்.

இதனை ஆராய எச்சதத்தன் ஒருநாள் மறைந்திருந்து கண்காணித்தார். மணல் லிங்கத்தின் முன் விசாரசர்மன் ஆழ்ந்த தியானத்தில் இருக்க, மாடுகள் தாமாகவே லிங்கத்தின் மீது பால் சுரந்து அபிஷேகம் செய்தன. இதனை கண்ட தந்தை எச்சதத்தன் கடும் சினம் கொண்டு அந்த மணல் லிங்கத்தை காலால் தகர்த்தார்.

Lord Chandikeswarar
IMAGE SOURCE

அதன்பிறகு தவத்தில் இருந்த விசாரசர்மன் எழுந்து ஒரு குச்சியால் தந்தையின் காலை தாக்கினார். அந்த குச்சி கோடாரியாக மாறி அவர் தந்தையின் காலை கடுமையாக தாக்கியது.

அப்போது தோன்றிய சிவபெருமான், விசாரசர்மனின் பக்தியை மெச்சி அவர் தந்தையின் கால்களை சீராக்கி, விசாரசர்மனுக்கு ஆச்சரிய வரமொன்றை அளித்தார்.

சிவபெருமான் அருளிய வரம் :

சிவனின் சொத்துக்களான கணங்கள் அனைத்தையும் காவல் காப்பவராக விசாரசர்மன் திகழ்வார் எனவும், தனக்கு நிகழ்ந்த பூஜைகளும், மரியாதைகளும் இனி அவருக்கும் கிடைக்கும் எனவும் அருளினார். இதனை அடுத்து சிவனின் சொத்துக்களான சிவ கணங்களை காவல் காத்து ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார் சண்டிகேஸ்வரர்.

கைதட்டி வணங்கும் முறை சரியா?

பெரும்பாலான சிவன் கோவில்களில் சிவனை வணங்கி விட்டு பிரகாரம் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். இவரை வணங்கும் பக்தர்கள், சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ வணங்குவார்கள்.

ஆனால் அப்படி வணங்கக்கூடாது. சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். சிவனிடமே என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம்.

எனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது, மிக மெதுவாக மூன்று முறை கைதட்டி, வந்தேன்.. வந்தேன்.. வந்தேன்.. சிவனின் தரிசனம் கண்டேன்.. கண்டேன்.. கண்டேன்.. என கூற வேண்டும். அப்படி வணங்கினால் சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து, நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்வார். உடனே நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

சிவ வடிவங்கள் 64ம் அவற்றின் பின்னால் உள்ள சம்பவங்களும்!!

இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.

wall image

Post Views: 348
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
இன்று CSK vs KKR ல் 3வது தொடர் வெற்றியை பெறுமா சென்னை ?

இன்று CSK vs KKR ல் 3வது தொடர் வெற்றியை பெறுமா சென்னை ?

  • April 21, 2021
View Post
Next Article
உங்கள் பேஸ்புக் போஸ்ட்களை கூகிள் ட்ரைவில் ஏற்றுமதி செய்வது எப்படி ?

உங்கள் பேஸ்புக் போஸ்ட்களை கூகிள் ட்ரைவில் ஏற்றுமதி செய்வது எப்படி ?

  • April 22, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.