Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
ஐயப்பனுக்கு

ஐயப்பனுக்கு மாலை அணிந்தவரா நீங்கள்?

  • December 1, 2020
  • 375 views
Total
1
Shares
1
0
0
Ayyappa devotees continue to throng Sabarimala temple
image source

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.

  • ஐயப்பனுக்கு மாலை அணிந்தவரா நீங்கள்
  • ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் மாலை அணியும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றிப் இங்கு பார்ப்போம்.

சபரிமலைக்கு கிளம்பி செல்கையில், எரிமேலியில் ‘பேட்டைத்துள்ளல்”, பம்பையில் விளக்கேற்றி வழிபடும் நிகழ்வு, அன்னதானம் கொடுக்கும் பணிகளில் கன்னிசாமிகள் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும்.

இருமுடி ஏந்திக்கொண்டு செல்லும் ஐயப்ப பக்தர்கள், வழியில் வீண் பேச்சு பேசக்கூடாது. குழுவாக பயணம் செல்லும்போது அனைவரோடும் ஒத்துழைக்க வேண்டும். முடிந்த வரையில் சுற்றுலா போல் செல்லாமல், நேராக சபரிமலைக்கு சென்று திரும்புவது நலம். இவற்றை கடைபிடித்தால் அய்யன் அருள் என்றும் உண்டு.

தரிசனம் முடிந்து வீடு திரும்பிய பின் இருமுடிக்கு பூஜை செய்த பிறகு தான் மாலையை கழற்ற வேண்டும். இடையிலேயே கழற்றக்கூடாது. குறிப்பாக குளிக்கும்போது கூட மாலையை கழற்றக்கூடாது.

பெண்களை மனதளவிலும் தவறாக எண்ணக்கூடாது. வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டுவிலக்காகும் பட்சத்தில், வெளியில் மாலை அணிந்த ஒருவரின் வீட்டில் தங்கிக்கொள்ளலாம் அல்லது தனியறையில் அவர்கள் பார்வையில் படாதவாறு தங்கிக்கொள்ளலாம்.

விரத காலத்தின் போது குடிப்பழக்கம், செருப்பு அணிவது, அசைவம் உண்ணுதல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புகைப்பிடித்தல், சவரம் செய்வது, முடிவெட்டுவது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த ஒரு மண்டல காலத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்தால், பின்னர் அதுவே நாம் தவறான பழக்கங்களை விட்டுவிடுவதற்கு உதவியாக இருக்கும்.

வீட்டின் அருகில் நடக்கும் ஐயப்ப பூஜைகளில் கலந்து கொண்டு சேவை செய்யலாம். ‘அன்னதானம்” தரும் நிகழ்வுகளிலும் ஐயப்பமார்கள் உதவி செய்வது நல்லதொரு பாக்கியம்.

சபரிமலைக்கு மாலை அணிந்து கொள்ளும் சாமிகள் கறுப்பு நிற அரைஞாண் கயிறு, கையிலும் கழுத்திலும் கறுப்பு நிற கயிறு ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. கறுப்பு, நீலம், காவி, பச்சை நிறத்தில் அமைந்த மேல் ஆடைகளையும், வேஷ்டிகளையும் உடுத்தலாம்.

கன்னிசாமிகள் மலைக்கு கிளம்பும்போது, அவர்களின் குருசாமியின் தலைமையில் வீட்டிலேயே ஐயப்பனுக்கு பூஜை செய்து ஏழைகளுக்கும், ஐயப்ப பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும். இந்த அன்னதானத்தில் ஐயப்பன் மனித ரூபத்தில் கலந்து கொள்வார் என்பது ஐதீகம்.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

ஐயப்பன் அருள் பொழியும் அறுபடை வீடுகள் (6) எவை தெரியுமா ?

இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.

wall image

Post Views: 375
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஹார்மோன்

ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

  • November 30, 2020
View Post
Next Article
கூகிள் மேப்ஸ் மூலம் காணக்கூடிய 10 புதிரான இடங்கள்

கூகிள் மேப்ஸ் மூலம் காணக்கூடிய 10 புதிரான இடங்கள்

  • December 1, 2020
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.