அவ்வப்போது, நம்பமுடியாத வழிகளில் வேட்டையாடும் விலங்குகளைப் பற்றி யூடியூப் வீடியோக்கள் வெளிவந்து வைரலாகின்றன. இவை எப்போதாவது நிகழும் அரிய நிகழ்வுகள். ஆனால், விலங்குகள் வேட்டையாடுவதற்கான முறையாக அடிக்கடி பயன்படுத்தும் அறியப்படாத மற்றும் அசாதாரண முறைகளின் நீண்ட பட்டியல் உள்ளது.
கொமோடோ டிராகன்
சில நேரங்களில் ‘நில முதலைகள்’ என்று அழைக்கப்படும் இந்த மிருகங்கள் பூமியில் வாழும் மிகப்பெரிய பல்லிகள். 3 மீ நீளம் வரை வளர்ந்து 70 கிலோகிராம் வரை எடையுள்ளவை. அவை மாமிச உண்ணிகள் என்பதோடு மனிதர்களுக்கு அபாயகரமான அனுபவங்களைக் கொடுத்தவையாக கூறப்படுகிறது. கவலைப்பட வேண்டாம், அவை பெரும்பாலும் இந்தோனேசியாவின் கொமோடோ (இது ஒரு தேசிய பூங்கா) உட்பட இந்தோனேசியாவின் ஒரு சில தொலைதூர தீவுகளுள் மட்டுமே வாழும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இவை இரையைக் கொல்லும் முறையைப் பார்த்தோமானால், அவற்றின் இரைமீது பாய்ந்து, அவற்றின் அடிப்பகுதி அல்லது தொண்டையை அவற்றின் கூர்மையான நகங்கள் மற்றும் கூரிய பற்களால் தாக்கி, விரைவான இரத்த இழப்பு அல்லது அபாயகரமான சிதைவுகளை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இந்த ஆரம்ப கொமோடோ தாக்குதல் எல்லா நேரத்திலும் இரையைக் கொல்லப் போதுமானதாக இல்லை என்பதனால் அடிப்பாகம் பாதிக்கப்பட்ட விலங்கை மாமிசத்தை கிழித்து உயிரோடு சாப்பிடுவதற்கு முன், இரையை கடுமையாக காயப்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக இரையான விலங்கின் நிலையை மோசமாக்குவதற்கு தேவையான அளவு டிராகனின் பற்களில் விஷம் உள்ளது.
தங்கக் கழுகுகள்
இந்த வேட்டைக்காரப் பறவைகள் அணில்,அழும் பறவை,வண்ணக்கோழி, ஊர்வன மற்றும் சிறிய பறவைகள் உட்பட பலவகையான உணவுகளை உட்கொள்ளும் பண்புடையன. ஆனால், இவை மான்கள் மீதான தாக்குதல்களுக்கு நன்கு அறியப்பட்டவை. இந்த இருண்ட பழுப்பு நிற வடக்கு அரைக்கோள கழுகுகள் சக்திவாய்ந்த கால்களையும் கூர்மையான நகங்களையும் கொண்டுள்ளன. அவை மேலே இருந்து ஊடுருவி, இரையை பிடிக்க இயலாது.தங்கக் கழுகுகள் குன்றின் விளிம்பில் ஆடுகளின் மீது பாய்ந்து, அவற்றைக் கொல்வதற்காக அவற்றைக் கீழேயுள்ள பாறைகளில் தூரத்திலிருந்து வேண்டுமென்றே போடுகின்றது போன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வெளிவந்தபின், இவை யூடியூபில் வைரலாகின.
இறந்த ஆட்டின் சடலத்தை தங்கச் சொண்டு கழுகுகள் பின்னர் உண்ணும். ஆடுகளின் எடையைக் கருத்தில் கொண்டு, சில நேரங்களில் 100 கிலோகிராம் அல்லது 250 பவுண்டுகளுக்கு மேல், அவற்றைப் பற்றிப் பிடிப்பதும், நடுவானில் தூக்கி கொண்டு பறப்பதும் எளிதான விஷயமல்ல. கழுகுகள் சந்தர்ப்பவாத ஊட்டி என்பது அவற்றின் வித்தைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
மின் விலாங்கு
மின் விலாங்கு போன்ற விலங்குகள் வேட்டையாடும் போது, அவற்றின் அசாதாரண மின்சார தாக்குதலை தங்கள் இரையைத் திகைக்கச் செய்ய பயன்படுத்துகின்றன. மின் விலாங்குகள் பொதுவாக இருண்ட மற்றும் ஆழமான நீரில் வாழ்கின்றன. எனவே அவற்றின் அதிர்ச்சி சக்தி சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவர்களை நொடிகளில் உணவாக மாற்றிவிடும்.
மின் விலாங்கின் உணவுகள் பொதுவாக சிறுமீன், ஓட்டுமீன்கள், பூச்சிகள் மற்றும் சிறிய முள்ளந்தண்டுகள்,நீர்வாழிகள் மற்றும் ஊர்வன போன்றவற்றை உள்ளடக்கியது. ஈல் அதன் அதிர்ச்சி சக்தியை வேட்டையாட அல்லது பாதுகாப்புக்காக பயன்படுத்துகிறது. விலாங்கின் உடலில் உள்ள இயக்க உணர்திறன் முடிகள் இருண்ட நீரில் எந்த அழுத்த மாற்றத்தையும் கண்டறிந்து, இரட்டிப்பைத் தூண்டுகிறது. இது இரையின் தசைகளைத் தாக்கும் இரண்டு விரைவான மின்சார துடிப்புகளாகும். இவ்வதிர்ச்சி அவற்றை அதிர்ச்சியூட்டுகிறது, இறுதியில் அவற்றை முடக்குகிறது.இதனால் மின்விலாங்கு உணவை உட்கொள்ளக் கூடியதாக உள்ளது.
டீனோபிடே
இந்த சிலந்தி இனம் பொதுவாக வலை வீசும் சிலந்திகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பெயரே, இரையைப் பிடிக்க அவை பயன்படுத்தும் தனித்துவமான வேட்டை நுட்பத்தை விளக்குகிறது. ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள வெப்பமண்டலங்களில் காணப்படும். வலை வீசும் சிலந்திகள் இருட்டிற்குப் பிறகு வேட்டையாடுபவர்களாக இருக்கின்றன.
அவற்றின் பிரமாண்டமான கண்களை இரையை கண்டுபிடிப்பதற்கு அவற்றின் பார்வையைப் பயன்படுத்துகின்றன. பொதுவாக எறும்புகள், அந்துப்பூச்சிகள்,வெட்டுக்கிளிகள் அல்லது வண்டுகள் இவற்றின் உணவு. பாதிக்கப்பட்ட இரையின் மீது வலையை வீசும் மின்னல்-விரைவான இயக்கம் இதன் தனிச் சிறப்பு. சிலந்தி வலையை அதன் சுய சுரப்புக்களை பயன்படுத்தியே உற்பத்தி செய்கிறது. சில நேரங்களில் அதன் சொந்த அளவை விட மூன்று மடங்கு உற்பத்தி செய்கிறது. இரை வரும் வரை பதுங்கியிருப்பதோடு மலப் பொறியை வலையில் வைக்கிறது. எந்தவொரு சிறிய அசைவையும் கண்டுபிடிக்கக் கூடிய வகையில் தயாராகக் காத்திருக்கும் இச்சிலந்தி இரை வந்தவுடன் அதன் மீது வலையைப் பீய்ச்சி பாய்ந்து தாக்குகிறது. பின் கடித்து உண்கிறது.
தவளைமீன்
இந்தத் தூண்டிலமீன்கள் மிகவும் அசிங்கமானவை, மேலும் அவை பொதுவாக கடல் தளத்தில் வாழும் மோசமாக நீந்தும் விலங்குகள், ஆனால் இவை மிகவும் சிக்கனமான வேட்டைக்காரர்கள். அவற்றின் அசாதாரண தோற்றம் இரையை பிடிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வுருவம் உருமறைப்பு மற்றும் போலிப்படுத்தல் ஆகியவற்றின் கலவையாகும். இரையைக் கண்ட உடனே , 6 மில்லி விநாடிகளுக்கு குறைவான மின்னல் வேகத்தில் இரையைத் தாக்குகின்றன. (பெரும்பாலான மனிதர்களின் எதிர்வினை நேரம் 200 மில்லி விநாடிகள்).
தவளைமீன்கள் தங்களை மறைத்துக் கொள்ள வித்தியாசமான வண்ணங்களை மாற்றிக் கொள்கின்றன. அவற்றின் நுட்பம் வித்தியாசமானது.அவை இரையைப் பிடிக்க நகர்வதில்லை, மாறாக இரையை விசித்திரமான தோற்றத்துடன் கூடிய பின்னிணைப்புகளைபயன்படுத்தி ஈர்க்கின்றன. பெரும்பாலும் புழுக்களைப் போல தோற்றமளிக்கும் இப்பின்னிணைப்புக்கள், இரையாகப் போகும் விலங்கு நெருங்கும் போது அவ்விடத்தில் கிடைக்குமாறு விடப்படுகிறது. அதனை இறை நெருங்கி வரும்வரை பதுங்கியிருக்கும் இவை சரியான தருணம் அமைந்ததும் பாய்ந்து தாக்குகின்றன. தவளைமீன் ஒரு பெரிய அகலமான வாயைக் கொண்டுள்ளது. இவ்வாய் திடீரென திறந்து இரையை மூழ்கடிக்கிறது, பின் உணவுக்குழாயில் உள்ள ஒரு சிறப்பு தசையை இரையை விழுங்குவதன மூலம் இரை தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்கிறது. தவளை மீன் அதன் இரு மடங்கு விலங்குகளை விழுங்கக்கூடியது.
சிலந்திகளுக்கு பாம்பை விட அதிகமான அளவு விஷம் இருக்கிறது!!
தரைப்பருந்து
நெடுங்கால் பாம்புப்பருந்து அல்லது நெடுங்காற்கழுகு என அழைக்கப்படும் பறவைகள் இவை. அழகு தான் ஆபத்துக்கு அடித்தளம். பார்க்க அழகாக இருக்கும் இப்பறவைகள் கடினமானவை, இரக்கமற்றவை. வழக்கத்திற்கு மாறாக இவை நிலப்பரப்பில் வேட்டையாடுகின்றன.
ஜோடிகளாக வேட்டையாட விரும்பும் நெடுங்கால் பாம்புப்பருந்துகள் தெரிவுசெய்யும் ஆயுதம் அவற்றின் கால்கள். ஏனெனில் அவை இரையை உதைத்து அல்லது அடித்து நொறுக்கி கொலை செய்கின்றன. நெடுங்காற்கழுகுகள் தாக்குதல்களை நாளின் குளிரான நேரத்தில் நடாத்துகின்றன, முதலில் அப்பகுதியில் உள்ள தாவரங்களை மிதித்து அழிக்கின்றன. அதன் பின் இரையை தாக்கி அழிக்கும்.
ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்தத் தரைப்பருந்துகளின் இரையில் வெட்டுக்கிளிகள் மற்றும் வண்டுகள் போன்ற பூச்சிகளும் எலிகள், முயல்கள் போன்ற பாலூட்டிகளும் உள்ளன. இப்பறவைகள் சில சமயங்களில் கோப்ரா போன்ற பாம்புகளைக் கொன்று குவிக்கின்றன அல்லது அசைய விடாமல் தலையில் மிதித்து தொடர்ந்து தடுமாறச் செய்கின்றன. தரைப்பருந்தின் அறிவியல் பெயர்,Sagittarius serpentarius, ‘பாம்புகளின் வில்லாளர்’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது .அவை தாக்கும் போது, அவற்றின் சிறகுகளை விரித்து, மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் அதனை ஒரு திசைதிருப்பலாகவும் பயன்படுத்துகின்றன. ஏனெனில், இறகுகளில் சதை இல்லாததால் பாம்பு கடித்தால், பறவையை காயப்படுத்தாது.
மார்கே
தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த தனி இரவு நேர சிறிய பூனை, அதன் இரையை ஈர்க்க குரல் மாற்றத்தின் அரிய நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. குரங்கு மற்றும் அணில் போன்ற சிறிய பாலூட்டிகளையும், பறவைகள், முட்டை, பல்லிகள் மற்றும் மரத் தவளைகளையும் இந்த பூனை வேட்டையாடுகிறது. இது சில சமயங்களில் சைவ உண்ணியாகவும் அறியப்படுகிறது.
இவை காட்டு பைட் டாமரின் போன்ற குரங்குகளின் குழந்தைகளின் அழுகையைப் போல குரல் கொடுப்பதாக அறியப்படுகிறது. இந்த யுக்தியின் நோக்கம் இரையை ஈர்ப்பதாகும். இதனால் தாக்குதலை எளிதாக்குவதுடன்,அலைதல் மூலம் செலவழிக்கும் ஆற்றலைக் குறைக்கிறது, வெற்றியின் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.
ஆர்ச்சர் மீன்
நாங்கள் எல்லோரும் சிறு வயதில் தண்ணீர் துப்பாக்கி கொண்டு விளையாடி இருப்போம், ஆனால் ஆர்ச்சர் மீன் இந்த யுக்தியை வேட்டையாடுவதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. ஆர்ச்சர் மீன்கள் மேற்பரப்புக்கு அருகில் மிதந்து, நிலத்தை அடிப்படையாகக் கொண்ட பூச்சிகளை சில மீட்டர் தொலைவில் இருந்து சுடுகின்றன. முதல் தாக்குதலில் அவை தவறவிட்டால், விடாமுயற்சியுடன் முயற்சிக்கும். உண்மையில் ஒரே நேரத்தில் ஏழு நீர் சாரங்களை அவற்றின் வாயிலிருந்து சுட முடியும். வில்லாளரின் மீனின் பெயர் இந்த நுட்பத்திலிருந்து வந்தது. இது ஒரு ‘அம்பு’ போல தண்ணீரை அதன் இரையில் துப்பும் திறனை பிரதிபலிக்கிறது. அவை துல்லியமாக சுடக் கூடியவை.
தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சதுப்புநிலங்கள் மற்றும் கரையோரங்களில் பெரும்பாலும் உப்பு நீர் வாழ்விடங்களில் காணப்படுகின்றன.அவற்றின் இரையை திறம்பட வீழ்த்த முடியாவிட்டால் இம்மீன்கள் தண்ணீரை விட்டு குதித்து தாக்கும்.
ஒளிர்புழுக்கள்
இந்த ஒளிரும் குடம்பிகள் பார்க்க அழகாக இருக்கலாம் மற்றும் நியூசிலாந்தின் சில பகுதிகளில் சுற்றுலா தலமாக பயன்படுத்தப்படலாம், ஆனால் அவற்றின் பளபளப்பு உண்மையில் அவற்றின் வேட்டை நுட்பமாகும். ஒளிர்புழுக்கள்உயிரியல் ஒளிர்மங்கள் மூலம் ஒளிரும். இது அடிப்படையில் ஒரு வேதியியல் எதிர்வினை மூலம் உருவாகும் ஒளியை வெளியேற்றும். இவ்வொளி பூச்சிகளைக் கவரும். ஒளியுடன் மிக நெருக்கமாக இருக்கும் எந்த பூச்சிகளும் குகைகளில் காணப்படும் பளபளப்பான புழுக்களின் பெரிய ஒட்டும் வலைகளால் சிக்கிக் கொள்கின்றன. எனவே இருண்ட மற்றும் ஈரப்பதமான குகைகள் பளபளப்புப் புழுக்களுக்கான சரியான வேட்டை மைதானமாகும்.
போத்தல்நாசி டால்பின்கள்
வேட்டையாடும்போது டால்பின்கள் ஒரு அணியாக வேலை செய்கின்றன, ஆனால், அவை பயன்படுத்தும் விசித்திரமான நுட்பங்களில் ஒன்று ‘மண் வலைகளை’ உருவாக்குவதன் மூலம் அவற்றின் இரையை (மீன்களை) தண்ணீரிலிருந்து வெளியேறி, தமது வாய்க்குள் குதிக்கச் செய்கின்றன.
ஒரு டால்பின் கடல் தளத்தைத் தந்து வாலால் தாக்கும். இதனால் புழுதி கலங்கி நீரில் ஒரு மண் சூழல் உருவாகும். இதன் விளைவாக, சிக்கிய மீன்கள் தண்ணீரில் இருந்து குதித்து வளையத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றன. அங்கு டால்பின்கள் தங்கள் வாயைத் திறந்து கொண்டு அவற்றின் தீவனத்திற்காக காத்திருக்கும், குதித்த மீன்கள் யாவும் நேரடியாக டொல்பின்களின் வாயில் சென்று விழும். இவ்வாறு மண் வளையம் மூலம்உணவைப் பெறும் நுட்பம் மிகவும் புத்திசாலித்தனமான உத்தி.
மேலும் வாசிக்க டாப் 10 பகுதிக்கு செல்லவும் :
முகப்பு பட உதவி :
தகவல் உதவி : Listverse