Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

இறந்த பின் தன்னை நினைத்து அழுபவர்களை நமது ஆத்மா எங்கிருந்து பார்க்கும்!!

  • July 18, 2020
  • 1K views
Total
5
Shares
5
0
0

இறந்த பின்

இறந்த பின் தன்னை நினைத்து அழுபவர்களை நமது ஆத்மா எங்கிருந்து பார்க்கும்!!
image source

மனிதராய் பிறந்த எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் நாம் இறந்த பின் தன்னை நினைத்து அழுபவர்களை நமது ஆத்மா எங்கிருந்து பார்க்கும் என்பது தான். அதை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். பொதுவாக மனிதன் இறக்கும் வரை அவன் மனம் நிறைய விடயங்களை கற்பனை செய்து பார்க்கும்.

தூரத்தில் இருக்கும் நண்பர்களோ உறவினர்களோ என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்றும் அல்லது தன்னைப் பற்றியும் நினைத்துப் பார்க்க முடியும் ஆனால் ஆன்மாவுக்கு உயிர் இருக்கிறது என்று சொல்லும் மனிதனுக்கு அவன் இறந்த பின்பும் அவனுடைய ஆன்மா எப்படி இருக்கும் எங்கெல்லாம் பயணம் செய்ய முடியும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

இறந்த பின் தன்னை நினைத்து அழுபவர்களை நமது ஆத்மா எங்கிருந்து பார்க்கும்!!
image source

உண்மை தான் என்ன?

சனாதன தர்ம சாஸ்திரம் இதில் யார் யார் எந்த எந்த நிலையில் படைக்கப்படுகிறார் யார் யார் யாருடைய ஆன்மா எங்கே செல்லும் யார் மேலே யார் கீழே போன்ற மத நம்பிக்கையை பற்றி பேச கூடியது. அந்த தர்ம சாஸ்திரத்தில் மனிதன் இறந்த பின்பு அவர்களுடைய ஆன்மாக்கள் எங்கே பயணிக்கின்றன என்பது பற்றி குறிப்பிடுகிறது. அது பற்றி இங்கே பார்போம்.

மனிதர்கள் உயிர் வாழும் போது மட்டுமல்ல அவர்கள் இறந்த பின்பும் கூட மனித உடல்கள் தான் இறக்கின்றனவே ஒழிய ஆன்மாகள் அழிவதில்லை. ஆன்மாக்களுக்கு உயிர் உண்டு என்று தான் சொல்லப்படுகிறது. அப்படி உயிரோடு இருக்கும் ஆன்மா உடல் இறந்த பின் என்ன தான் செய்கிறது ஒரு மனிதன் இறந்த பின் முதல் ஒன்பது நாட்கள் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு மிக அருகிலேயே ஆன்மாக்கள் உலாவும்.

குறிப்பாக முதல் மூன்று நாட்கள் நீரிலும் நான்காம் நாள் முதல் ஆறாம் நாள் வரை நெருப்பிலும் ஏழாம் நாள் முதல் ஒன்பதாம் நாட்கள் வரையில் ஆகாயத்திலும் ஆன்மாக்கள் வசிக்கும். இந்த ஒன்பது நாட்களும் வெறுமனே உலவுவது இல்லை. தன் இறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் தன்னுடைய வீட்டுக்கு யாரெல்லாம் துக்கம் கேட்க வருகிறார்கள் என்று பார்த்துக் கொண்டே இருக்குமாம். அப்படி ஒன்பது நாட்கள் நோட்டமிட்டு பத்தாவது நாளில் அந்த ஆன்மாவின் ஜீவன் தன்னுடை வீட்டுக்கு வருகிறது.

இறந்த பின் தன்னை நினைத்து அழுபவர்களை நமது ஆத்மா எங்கிருந்து பார்க்கும்!!
image source

அதனால் தான் பத்தாவது நாள் செய்யப்படும் காரியம் மிக முக்கியமானது என்று இந்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. தான் வாழ்ந்த வீட்டுக்குள் பத்தாம் நாள் அடியெடுத்து வைக்கிற ஆன்மாவின் ஜீவன் பதினொன்றாம் நாள் மற்றும் பனிரெண்டாம் நாட்களில் நாம் வைக்கின்ற பிண்டங்களை ஏற்றுக்கொண்டு உண்ண ஆரம்பிக்கிறது. பன்னிரண்டாம் நாள் பிண்டத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் பதின்மூன்றாம் நாள் தான் எமனின் காவலர்களான கிந்திரன்கள் என்றும் அழைக்கப்படுவோர் கயிற்றினால் கட்டி இந்த ஆத்மாவை இழுத்து கொண்டு செல்லும். அப்போது ஆன்மா தன் வாழ்ந்த வீட்டை பார்த்து கதறி அழுமாம்.

வீட்டை விட்டு செல்லும் ஆன்மா ஒரு நாளைக்கு இரவு பகல் சேர்த்து 247 மீட்டர் தூரம் அளவுக்கு பயணிக்குமாம். இப்படி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் ஆன்மாக்களுக்கு பசிக்கும் என்பதால் மாதத்தில் ஒரு நாள் எந்த திதியில் அந்த ஜீவன் இறந்ததோ அந்த திதியன்று மட்டும் ஓய்வு கொடுக்கப்படும். அப்படி பசி எடுக்கும் போது யார் பிண்டம் அளித்து பசி தாகம் தீர்க்கிறார்களோ அவர்களை ஆன்மா வாழ்த்தும். அதனால் தான் வீட்டில் பெரியவர்கள் இறந்த திதி அன்று படையல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதே போல் இரண்டு முதல் பன்னிரெண்டு மாதங்களும் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் அவர்கள் இறந்த திதி அன்று மகா பிண்டம் வைத்து வழி பட வேண்டும். பன்னிரெண்டு மாதங்கள் வரை ஆன்மாக்களின் பயணம் தொடரும். அதன் பின் ஆன்மா எமலோகத்தை அடையும். இறந்த ஆன்மா ஒரு வருடம் பயணம் செய்யும் அதனால் தான் பொதுவாக இறப்பு நடந்த வீட்டில் ஒரு ஆண்டு வரை எந்த வித கொண்டாட்டங்களும் சுப காரியங்களும் செய்வதில்லை.

இப்படி பயணம் மேற்கொண்டு எமலோகத்தை அடைந்த பின்னர் தான் அந்த ஆன்மா சொர்கத்துக்கா போகுமா இல்லை நரகத்துக்கா என்று தீர்மானிக்கப் படுகிறது. அது அவரவர் பாவ கணக்கை பொறுத்தது. பாவம் செய்த ஆன்மாவாக இருந்தால் எம புரத்துக்கும் அதுவே புண்ணியம் நிறைய செய்த ஆத்மா வாக இருந்தால் சொர்கத்துக்கு. இது தான் நாம் இறந்த பின்பு நடக்கும் காரியங்கள்.

இறந்த பின் தன்னை நினைத்து அழுபவர்களை நமது ஆத்மா எங்கிருந்து பார்க்கும்!!
image source

இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

image source

Post Views: 1,016
Total
5
Shares
Share 5
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சிவபெருமான்

சிவபெருமான் பாம்பை அணிந்து கொண்டதன் சிறப்புகள்!!

  • July 17, 2020
View Post
Next Article
உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 15

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 15

  • July 19, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.