இல்லத்தரசிகளுக்கான சில டிப்ஸ் !
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிகளவு சுமையை தாங்குவதில் வீட்டின் இல்லத்தரசிகள் உள்ளனர். இதற்கு முன்னர் இல்லத்தரசிகளுக்கு ஓய்வு எடுப்பதற்கு என்று சில நேரங்கள் கிடைக்கும். ஆனால், இப்போது அவை தலைகீழாக மாறிவிட்டது.
ஏனெனில் இப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்த ஊரடங்கு வீட்டின் இல்லத்தரசிகளுக்கு அதிகமான வேலைபளுவை உருவாக்கி இருக்கின்றது. ஒருபுறம் கணவன், மறுபுறம் குழந்தைகள் என மாறி, மாறி வேலைசெய்து கொண்டே இருக்கின்றனர். ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கு சிறிது கூட நேரம் கிடைப்பது இல்லை.
இதை எப்படி சமாளிப்பது? என்று தெரியாமல் வீட்டின் இல்லத்தரசிகள் தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கான சில டிப்ஸ் இதோ..!
டிப்ஸ் :
ஒரு நாளைக்கு நீங்கள் என்ன என்ன வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும்? என்று உங்கள் வேலைக்கான நேரத்தை பட்டியலிடுங்கள்.
அந்த பட்டியலில் உள்ளது போல் செயல்படுங்கள். அதை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நிச்சயம் உங்களுக்கு என்று சில ஒய்வு நேரங்கள் கிடைக்கும்.
உங்கள் குழந்தைகளை எப்போதும் பிஸியாக வைத்திருங்கள். அவர்களுக்கு புத்தகம் படிக்க, புதிய விஷயங்களை
கற்று கொள்ள போன்றவற்றிக்கு அவர்களை ஊக்குவியுங்கள். அவை உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், நீங்கள் சிறிது ஓய்வு எடுப்பதற்கும் நிச்சயம் உதவும்.
உங்கள் கணவர்களுக்கு சமைக்க கற்று கொடுங்கள். அவர்கள் சமைக்க கற்று கொள்ளும் பொழுது, அவர்களை உங்கள் சமையல் வேலைகளுக்கு உதவி செய்யுமாறு கேளுங்கள். அவர்கள் சமையல் கற்று கொள்ளும்
ஆர்வத்தில் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார்கள். இதனால் உங்கள் சமையல் வேலை விரைவில் முடிந்துவிடும்.
இந்த ஊரடங்கில் உங்களுக்கு துணி துவைப்பதிலிருந்து சிறிது நிம்மதி கிடைத்து இருக்கும். ஏனெனில் அனைவரும் வீட்டில் இருப்பதால் பெரும்பாலும் துணிகள் சேர்வது குறைந்து இருக்கும். ஆகையால் அந்த நேரங்கள் அனைத்தும் உங்களுக்கு ஓய்வு நேரமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு மனஅழுத்தம் அதிகம் ஆகும் போது உங்கள் நேரத்தை உங்கள் குழந்தைகளிடமோ அல்லது உங்களுக்கு
பிடித்த விஷயங்களின் மீதோ செலவிடுங்கள். அவை நிச்சயம் உங்களுக்கு மனஅழுத்தத்தை குறைப்பதோடு மகிழ்ச்சியையும் தேடித்தரும்.