Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

காந்தியும் கொடிய ஜெயிலரும் – செவ்வாய் சிந்தனைகள் | சிந் -1|

  • February 9, 2021
  • 273 views
Total
6
Shares
6
0
0

சிந்திக்கக் கூடிய கதைகள், தருணங்கள், தகவல்கள் மற்றும் வித்தியாசமான படைப்புக்களுடன் செவ்வாய் தோறும் சிந்தனை செவ்வாய் உங்களுக்காக, முதலாவது பதிப்பில் காந்தியும் கொடிய ஜெயிலரும்

காந்தியும் கொடிய ஜெயிலரும்

காந்தி
image source

மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.

எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன். மஹாத்மாவையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.
அடிக்கும்போது எல்லோரும் ஐயோ! என்று அலறினார்கள்.
ஆனால், மஹாத்மா மட்டும் “ராம்!ராம்!!” என்று சொன்னது, அவனை மிகவே யோசிக்க வைத்தது.

அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான். ஆனால், மஹாத்மாவை அவ்வப்போது உற்றுப் பார்த்தான். இலேசாகப் புன்முறுவல் காட்டினான்.

ஒரு நாள் “மிஸ்டர் மஹாத்மா”! என்று கனிவாக அழைத்து நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்; என்ன வேண்டும் என்றான்?

ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் மஹாத்மா. அவன் “பைபிள்” சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான். இந்தத் தொடக்கம் நட்பாக மாறியது; வளர்ந்தது.
ஒரு நாள் காந்தியிடம் வந்த ஸ்மட்ஸ், நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன் என்றான்.

காந்தியும் கொடிய ஜெயிலரும் - செவ்வாய் சிந்தனைகள் | சிந் -1|
image source

மகிழ்ச்சி எது? வருத்தம் எது? என்று கேட்டார் காந்தி. இன்று உங்களுக்கு
விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி. ஆனால், உங்களைப் பிரிய
என்னால் முடியவில்லை. இது வருத்தமான செய்தி என்றான் ஸ்மட்ஸ்.

மஹாத்மா சொன்னார், “நானும் உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி, தான் சிறையில் தைத்த பூட்சை அவரிடம் கொடுத்தார்.

ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட்ஸ் கேட்டான்,
“இவ்வளவு துல்லியமாகத் தைக்க, என் கால்களின் அளவு எப்படிக் கிடைத்தது”
என்று கேட்க, சிரித்தபடி மஹாத்மா தனது மார்புத் துண்டை அகற்றினார்;

காந்தியும் கொடிய ஜெயிலரும் - செவ்வாய் சிந்தனைகள் | சிந் -1|
image source

ஆரம்பத்தில் ஸ்மட்ஸ் காலால் உதைத்தபோது ஏற்பட்ட வடுக்கள் அங்கு இருந்தன.
“இந்த வடுக்களை அளந்துதான் தைத்தேன்” என்று மஹாத்மா சொன்னார்.
“தடால்” என்று சத்தம்;

ஸ்மட்ஸ் கீழே விழுந்து காந்தியின் கால்களைப் பிடித்துக் கதறினான்.
“நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!! என்னை மன்னித்து விடுங்கள்.
இனி யாரையும் அடிக்க மாட்டேன்” என்றார்.
ஒரு நிமிடத்தில், ஒரு கொடிய மிருகம், மென்மையான மனிதனாக மாறியது.
“கல்லையும் கனியாக மாற்றலாம்” என்று இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஸ்மட்ஸ் சத்தியம் செய்தான். “இந்த பூட்ஸ்தான் இனி எனக்குக் கடவுள்;
இதை மட்டுமே வணங்குவேன்” அணியமாட்டேன். என்று சொல்லி அந்த பூட்சை தன் பூஜை அறையில் வைத்து அப்படியே வணங்கினான்.

காந்தியும் கொடிய ஜெயிலரும் - செவ்வாய் சிந்தனைகள் | சிந் -1|
image source

“நாம் நினைத்தால், யாரையும் மன்னிக்கவும் முடியும். மாற்றவும் முடியும்”.
மன்னிக்கின்ற மனம் தான் மனிதனை மகாத்மாவாக மாற்றும்.

இது போன்ற சிந்திக்க வைக்கும் கட்டுரைகளை எமது சமூகவியல் மற்றும் கதைகள் பகுதிகளில் காணலாம்.

கதைகள் பகுதிக்கு செல்லவும்
சமூகவியல் பகுதிக்கு செல்லவும்

எம்மை எமது பேஸ்புக் பக்கத்தில் பின்தொடரவும்

Facebook 4K Likes

Wall image source

Post Views: 273
Total
6
Shares
Share 6
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
ஐயனார்

மண்ணையும் மக்களையும் காக்கும் காவல் தெய்வம் ஐயனார்.!!

  • February 9, 2021
View Post
Next Article
ஸ்னாப் சாட்டில் உங்கள் நண்பர்கள் யாரென்பதை உறுதிப்படுத்துங்கள்

ஸ்னாப் சாட்டில் உங்கள் நண்பர்கள் யாரென்பதை உறுதிப்படுத்துங்கள்

  • February 10, 2021
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.