மிருகம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரை உலக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஆதி.
தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், வல்லினம், யாகாவார் ஆயினும் நாகாக்க,மரகத நாணயம் – யு டேர்ன் ஆகிய படங்களில் நடித்திருக்கும் இவர், இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் முதன் முதலாக வில்லனாக நடிக்கிறார்.
இவர் எற்கனவே தெலுங்கில் வில்லனாக நடித்திருந்தாலும், தமிழ் படமொன்றில் நேரடியாக வில்லனாக நடிப்பது இதுதான் முதல் முறை.
இது தொடர்பாக நடிகர் ஆதி பேசுகையில், இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் தயாராகும் படத்தில் வில்லனாக நடிக்கிறேன்.
தமிழ் மற்றும் தெலுங்கு தயாராகும் இப்படத்தில் தமிழில் மதுரை தமிழ் பேசும் வில்லனாகவும், தெலுங்கில் கடப்பா தெலுங்கு பேசும் வில்லனாகவும் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட சவாலான வேடத்தில் நடிக்கிறேன்.
இயக்குனர் லிங்குசாமியின் திரைப்படங்களில் வில்லனுக்கு எப்போதும் போதிய அளவு முக்கியத்துவம் இருக்கும். இவ்விரண்டு காரணத்தினால் இப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டேன்.
தொடர்ந்து தமிழில் கதையின் நாயகனாகவும், வில்லனாகவும்
நடிப்பேன் என்றார்.